உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின்

MK Stalin

குடும்ப சொத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சம உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது தமிழகத்தில் 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமானது கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. … Read more

உணவு விலை உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிப்பு

உணவு விலை உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரிப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டு வருகின்றது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் முடக்கப்பட்டதால் செயல்படுவது சற்று தாமதமாக தொடர்ந்து வருகின்றது. மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கினை தொடர்ந்து பழங்கள் ,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதில் சற்று தாமதமாகவே செயல்பட்டு வருகிறது .இதனால் பொருட்களின் விலை நிலவரம் சற்று மாற்றி அமைக்கப்படுகிறது.ஆகஸ்ட் 6 முதல் 10-ஆம் தேதி வரை 45 பொருளாதார நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. … Read more

வெடிபொருட்களுடன் இரவில் உலா வரும் மர்ம நபர்! அச்சத்தில் மக்கள்!

வெடிபொருட்களுடன் இரவில் உலா வரும் மர்ம நபர்! அச்சத்தில் மக்கள்!

சீர்காழியில் பாஸ்பரஸ் போன்ற வெடி மருந்துகளுடன் மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் சுற்றி திரிவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியின் விளந்திடசமுத்திரம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு கூரை வீடு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து வீட்டு உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றனர். இந்நிலையில், காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து … Read more

பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

பிரதமர் மோடியிடம் 9 ஆயிரம் கோடி நிதியுதவி கேட்ட தமிழக முதல்வர்

இன்று காலை. 10.30 மணி அளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்பொழுது 8 மாவட்ட முதலமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ்,குஜராத் முதல்வர் விஜய் ரூபானி,மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் … Read more

காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு

காங்கிரீட் கட்டாயத்தினால் இயற்கை சூழல் அழிவு

புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய திட்டத்தின் கீழ், நொய்யல் ஆற்றுக்கு ரூபாய் 230 கோடி அரசு ஒதுக்கியது.இதனால் 18 அணைக்கட்டுகள் ,22 ஏரிகள் தூர் வார படையெடுக்கின்றனர்.அதன் ஒரு கட்டமாக கரையோர பகுதிகளை காங்கிரீட் மயமாக்கல் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தூரங்களுக்கு புதர்கள், பசுமை வாய்ந்த சூழல்கள் இதனால் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி படுகின்றது. பூச்செடிகள், மரங்கள் போன்றவற்றை அழிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறுகின்றனர்.இதனால் பறவைகள், விலங்குகள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறினர். இயற்கையான … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது:! இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி அமைப்பானது, இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க திட்டமிட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய முத்தரப்பு பகுதியின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஏ) சமீபத்தில் ஒரு அறிக்கை … Read more

இன்று (11.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (11.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (11.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று (11.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.62 ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 … Read more

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை! தெற்கு ரயில்வே

சென்னை: 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சோதனையின் போது தண்டவாள பாதைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம் என்று தெற்கு … Read more

எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

எம்.பி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று!

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி எம்.பி வசந்த குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா வைரஸ் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில்தான் வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்:? செவிசாய்க்குமா மத்திய மாநில அரசு!

சேலம்-சென்னை இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனைக் கண்டித்து எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாய பெருமக்கள் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சீதாபழம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழி சாலைக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் … Read more