8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு … Read more

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம் 2600 ஊழியத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. கொரோன பாதிப்பின் காரணமாக இந்த ஊதிய உயர்வு அமல்படுத்த முடியமால் போனது. முன்பு இருந்ததைவிட இந்த கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள்அதிக வேலைச் சுமை உடன் தனது உயிரையும் பணயம் வைத்து சேவை செய்து வருகின்றனர்.இருந்தபோதிலும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா பரவல் … Read more

சாத்தான்குளம் பிரச்சனையில் கைதான தலைமை காவலரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!!

Madras High Court Madurai Bench

சாத்தான்குளம் வழக்கில் கைதான தலைமை காவலர் முருகன் ஜாமீன் கேட்டு மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிபதி தாண்வன் காணொளி காட்சி மூலம் விசாரித்தார். தொடக்க நிலை விசாரணை நடைப்பெற்று கொண்டிருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் முருகனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து … Read more

கல்லுரி தேர்வுகள் ரத்து: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு

Tamil nadu Government Cancels Semester Exam

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவதால் பள்ளி மற்றும் கல்லுரிகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. இதனையடுத்து இந்த ஆண்டிற்கான இறுதி தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இதனையடுத்து கல்வியாளர்கள் குழுவுடன் ஆலோசனை செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு … Read more

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் பாதியிலும் விடுபட்டன.மேலும் இந்த தேர்வுகளை நடத்த இரண்டுக்கும் மேற்பட்ட தடவை தேதிகள் அறிவித்தும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது இதனால் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு … Read more

கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

தமிழகத்தில் பொருத்தமாட்டில் கடந்த 2 மாதங்களில் அதிகமாக கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டு வருகிறது.இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும்,அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, ஏற்பட்ட மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்களும் வேறு … Read more

30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்ப இணைப்பு பெட்டியில் குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. இதை பார்த்த கிராம இளைஞர்கள், அவற்றை பாதுகாக்க தொடங்கினர். நாளடைவில் குருவிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி இணைப்பு பெட்டி முழுவதும் கூடு கட்டிவிட்டன. இந்த இணைப்பு பெட்டியலில்தான் தெருவிளக்கின் மொத்த கண்ட்ரோலும் இருந்தது.தெரு விளக்கை போட வேண்டுமென்றால் அந்தக் குருவிக் கூட்டைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.குருவிக் கூட்டை கலைக்க மனமில்லாமல் அந்த கிராம … Read more

ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?

ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?

ஈரோடு மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறும் ஜவுளி சந்தையானது உலகப்புகழ் பெற்றதாகும்.இந்த ஜவுளி சந்தையில் காலநிலைக்கு ஏற்ப துணிகள் விற்கப்படும். கோடைக் காலங்களில் காட்டன் துணிகள் சேலைகள் கைக்குட்டைகள் போன்றவை அதிக அளவில் விற்கப்படும்.குளிர்காலங்களில் சுவட்டர் இதுபோன்ற துணிகள் அதிக விலையில் விற்கப்படும். அதிகப்படியான துணிகள் ஒரே இடத்தில் விற்கப்படுவதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள வணிகர்களும் ஈரோட்டில் உள்ள … Read more

ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அடுத்த சலுகை

TN Assembly-News4 Tamil Online Tamil News1

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கூடுதலாக … Read more

கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

கோழி சண்டையால் கொலை நடந்த விபரீதம்?

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார் வீட்டில் அவரது மகனின் ஆசைக்காக 3 கோழிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.சசிகுமார் வீட்டினர், அடைக்கப்பட்டிருந்த கோழியை திறந்து விட்டுள்ளனர். கோழியானது பக்கத்தில் இருந்த காலி நிலத்தில் மேய்ந்தது. பின்பு எதர்ச்சியாக அருகிலுள்ள அன்பழகனின் வீட்டிற்குள் செல்லவே அதனைக் கண்ட அன்பழகனின் மனைவி அந்தக் கோழியை கல்லால் அடித்து விரட்டி உள்ளார். இதனைக்கண்ட சசிகுமாரின் மனைவி கோழியை கல்லால் அடித்து விரட்டியதற்காக கேட்டகப் … Read more