உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து போராடிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது

Theeran Thirumurugan-News4 Tamil Latest Online Tamil News Today

உப்பூர் அனல் மின் நிலையத்தை எதிர்த்து போராடிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன் கைது ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 543 ஹெக்டேர் நிலப்பரப்பில் தலா 800 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின்நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அனல் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு தடை கோரி அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘கால்வாய்களை மூடி … Read more

எழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?

எழுவர் விடுதலை தீர்மானம் ஆளுநரால் நிராகரிப்பா? தடைக்கல்லாக மாறினாரா சீமான்?

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து விட்டதாக தெரிகிறது. சீமானின் பேச்சுக்கு பிறகு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு செய்திகள் இப்போது டாப். அந்த வழக்கில், கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு 2014ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் … Read more

அடித்து ஆடும் மருத்துவர்! யார்க்கர் வீசிய தளபதி!!

அடித்து ஆடும் மருத்துவர்! யார்க்கர் வீசிய தளபதி!!

மருத்துவர் இராமதாஸ் அவர்கள் திமுகவின் முரசொலி நிறுவனமே பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டுள்ளது, அதை ஸ்டாலின் உரியவர்களிடம் ஒப்படைப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தார். மு.க ஸ்டாலின் அதை எதிர்த்து பின்வருமாறு அறிக்கை விட்டிருக்கிறார். மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் … Read more

பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு!

பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு!

பதவி உயர்வு கிடையாது திமுக ஆதரவு பெற்ற அமைப்புக்கு எடப்பாடி வைத்த ஆப்பு! திமுகவின் ஆதரவு பெற்ற ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகப்படியான சம்பளம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் மிகப்பெரிய அளவில் … Read more

வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்

வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்

நெல்லை : நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ய முயன்றதாக எழுந்த தகவலால் திமுக எம்எல்ஏவை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பொதுமக்கள் பூட்டினர். நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான அதிமுக, திமுக கடும் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இரு கட்சியினரும் போட்டி போட்டு கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றனர். இந் நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்ற பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டில் பெரியகுளம் தொகுதி திமுக … Read more

5 சதவீத அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

TN Govt Decision to Stop Bi Cycle Scheme-News4 Tamil Online Tamil News Channel

சென்னை: 5 சதவீத அகவிலைப்படி உயர்வால், தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு … Read more

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சொல்வதை தான் சொல்வோம், செய்வதைத் தான் செய்வோம் என்று உளறிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த வேட்பாளர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பேச்சிலும் இப்படி உளறி தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார் எதிர்கட்சி தலைவர். முன்னதாக நடந்த இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எண்பத்தி ஏழும் ஒன்பதும் நூற்றி ஏழு … Read more

5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைதான்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைதான்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி:தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அகில இந்திய வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியிருக்கிறது. இந்த காலம் தான் தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் காலமாகும். தற்போது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை … Read more

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே!

பேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்? பிகிலே! தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் “யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும்” என்று அரசியல் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தது குறித்து ஆளுந்தரப்பை விமர்சித்துப் பேசினார், இதனால் … Read more

சீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்!டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்!டிடிவி தினகரன் வலியுறுத்தல்

மதுரை: ராஜீவ் காந்தி விவகாரத்தில் பேசியதை சீமான் வாபஸ் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். என்ன நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை. சீமானின் சர்ச்சை பேச்சு தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அவ்வாறு பேசியதை சீமான் திரும்பபெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். மதுரை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த … Read more