2.0 வெர்ஷன் லோடிங்கா?!.. 2026-ல் ஒரே வெர்ஷன்தான்!. பழனிச்சாமி ராக்ஸ்!…

eps

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது எதிர்கட்சி தலைவராகி விட்டார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை தோற்கடித்துவிட்டு அதிமுக ஆட்சியை அமைக்க வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவரை அதிமுக கூட்டணியில் இணைக்க பழனிச்சாமி திட்டமிட்டார். ஆனால், விஜய் தரப்பில் நிறைய தொகுதிகள், துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என கேட்டதால் அந்த முடிவை பழனிச்சாமி … Read more

நீங்க மட்டும் அடிபணியலயா?!. பதட்டமா இருக்கீங்க!.. ஸ்டாலினை வாரிய தமிழிசை!.

tamilisai

2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து தமிழகத்தில் காலூன்ற எல்லாவகையிலும் முயற்சி செய்து வந்த பாஜகவுக்கு அந்த தேர்தல் முடிவு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனெனில், பாஜகவின் கொள்கைகளை மட்டுமல்ல. பாஜக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களையும் திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு திருத்த சட்டம் என எல்லாவற்றிலும் பாஜகவிற்கு எதிர்மறையான கருத்துக்களை திமுக முன்வைக்கிறது. தமிழகத்தில் பாஜகவை … Read more

அண்ணாமலையை தூக்கணும்!. திமுக – அதிமுக போட்ட ஸ்கெட்ச்!. ஆடிப்போன அமித்ஷா!…

stalin

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் முதல்வராக நியமிக்கப்பட்டாலும் மக்கள் அவரை ஆளுமை வாய்ந்த தலைவராக பார்க்கவில்லை. ஆனால், எதிர்கட்சி தலைவராக ஸ்கோர் செய்து வந்தார் மு.க.ஸ்டாலின். அவருக்கு கலைஞரின் மகன் என்கிற இமேஜ் இருக்கிறது. அதுதான் அவரை முதல்வராகவும் மாற்றியது. 2011 முதல் 2021 வரை 10 வருடங்கள் திமுக ஆட்சியில் இல்லை. ஆனால், அதிமுகவுக்கு சிறந்த எதிர்கட்சியாக திமுக விளங்கியது. அப்போதுதான் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கடந்த 4 வருடங்களாக எதிர்கட்சி தலைவர் போல … Read more

தவெகவுக்கு ஒன்னும் தெரியாது!.. விஜய் தவழும் குழந்தை!.. போட்டு தாக்கும் சேகர்பாபு!…

sekar babu

Tamilaga vetrik kalagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் நேற்று காலை நடந்தது.. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள். அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி … Read more

பேர மட்டும் கெத்தா வச்சிக்கிட்டா போதுமா!.. ஸ்டாலினை கிழித்த விஜய்…

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தின் முதல் வரிசையில் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், அம்மா ஷோபாவும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. விஜயும் அவர்களின் அருகில் சென்று கட்டிதழுவி வரவேற்றார். கூட்டம் துவங்கியதும் தவெக பொதுக்குழு உறுப்பினர்களுடன் நெஞ்சில் கை வைத்து உறுதி மொழி ஏற்றார் விஜய். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, … Read more

கூட்டி கழிச்சி பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்!.. சட்டசபையில் கபடி ஆடிய எம்.எல்.ஏக்கள்!…

stalin

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும். எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். … Read more

சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பல்!. பின்னணியில் யார்?…

savukku shankar

திமுக அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருபவர் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர். இதனால் இவரை 6 மாதங்கள் குண்டர் சட்டத்தில் அடைத்தனர். கரூரில் செந்தில் பாலாஜி பினாமி பெயரில் இடம் வாங்கி பிரம்மாண்ட மாளிகையை கட்டி வருகிறார் என்கிற செய்தியக் ஊடகங்களில் வெளிக்கொண்டு வந்தவர்தான் சவுக்கு சங்கர். இதனால், செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பேரில்தான் தான் கைது செய்யப்பட்டதாக அப்போது சொன்னார் சவுக்கு சங்கர். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் திமுகவை மீண்டும் கடுமையாக விமர்சனம் … Read more

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூடிய முதலமைச்சர்கள்!. யார் யார் வராங்க தெரியுமா?…

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. யார் பிரதமர் என தேர்ந்தெடுப்பது பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போட்டியாளர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த முறை இந்த 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றிருக்கிறார்கள். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் எதையும் கேட்டு பெறமுடியவில்லை. 39 எம்.பி.க்கள் இருந்தும் ஒரு … Read more

நாவடக்கம் வேண்டும்!.. நிதியை கொடுக்காத நீங்கள் பேசலமா?!. தர்மேந்திர பிரதானை எச்சரித்த ஸ்டாலின்!..

stalin

இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. தொடக்க விழாவில் நடந்த கூத்து.. அம்பலம்!! தமிழக்தில் திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.அதன்படி 2 ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு பின் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை அமல்படுத்த முடிவு செய்தது.தமிழக்தில் மொத்தம் 1.70 லட்சம் பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பத்திருந்த நிலையில் சுமார் 70 லட்சம் பெண்களின் … Read more