இவருக்கு பாரத ரத்னா வழங்குக! பிரதமருக்கு கடிதம் எழுதிய முக்கிய நபர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜகவின் டி எச் சங்கரமூர்த்தி கடிதம் எழுதி இருக்கின்றார். அத்வானி சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகின்றார். ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா சங்கம் மூலமாக அவர் நாட்டிற்கு செய்த தியாகம் மற்றும் பங்களிப்பு அளப்பரியது. அவருடைய பொது வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், நேர்மையான மனிதர் நம்பகத்தன்மை இருக்கும் … Read more

நல்ல தலைவர்களை கொண்டாடுவதில் தவறில்லை முக்கிய கட்சியின் நிர்வாகி புகழாரம்! ஆளும் தரப்பு அதிர்ச்சி!

பாஜக யாத்திரையில் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கின்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன்பாக தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் அவர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை மூலமாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இதற்கு … Read more

வேல் யாத்திரைக்கு தடைவிதித்ததை அடுத்து அதிரடி முடிவெடுத்த பாஜக! அதிர்ந்து போன தமிழகம்!

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மகாஜன் தலைமையில் அந்தக் கட்சியினர் நூற்றுக்கும் அதிகமானோர் வேலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க … Read more

தடையை மீறி தொடங்கிய வேல் யாத்திரை! திருத்தணியில் போலீஸ் குவிப்பு!

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் வேறு யாத்திரையை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாத காலத்திற்கு நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது. இந்த யாத்திரை திருத்தணியில் இன்றைய தினம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு … Read more

அரசின் உத்தரவால்! வருத்தத்திற்க்கு உள்ளான அந்த நபர்!

கரூர் மாவட்டத்தில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது. வேல் யாத்திரைக்கு கடைசி சமயத்தில் அரசு அனுமதி பெறுவதற்கு மறுத்திருப்பது மிகவும் வருத்தம் தருகின்றது. வேல் யாத்திரைக்கு பல மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். ஆனாலும் தமிழக அரசு திடீரென தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் போது தான் திமுக உள்பட பல கட்சிகளின் நிகழ்வுகள் நடந்துள்ளன.மதக்கலவரம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. … Read more

வேல் யாத்திரையைப் பற்றி விளக்கம் அளித்த திருமாவளவன்! அதிர்ச்சிக்குள்ளான ஆளும் தரப்பு!

பாஜக நடத்தவிருந்த கேலி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது.இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வரவேற்கின்றேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். நவம்பர் மாதம் ஆறாம் தேதி முதல் டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் … Read more

தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி காலை 10 மணி அளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த யாத்திரை ஆனது முருகனுடைய ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் … Read more

சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – பிரதமர் மோடி!

பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்”. மேலும் இப்போதாவது காங்கிரஸ் மக்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன்  மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி கள் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவி வரும் இத்தகைய … Read more

கொரோனா தொற்று பரவலின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் பரவியது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து என்பது அனைவரும் அறிந்ததே.  அதன்பிறகு சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நோயின் தாக்கமானது குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களை கண்டறிய ஒரு கோடி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதுமட்டுமன்றி காய்ச்சல் முகாம்கள் … Read more

மேலவையில் பாஜகவுக்கு பலம் அதிகரிப்பு – எப்படி தெரியுமா?

மேலவையில் பதினோரு உறுப்பினர்களின் பதவி காலம் ஆனது இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த பதினோரு நபர்களும் உத்திரபிரதேச மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.  தற்போது இவர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.  உத்திரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, … Read more