இரண்டு கோடியை நெருங்கி வரும் மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை

இரண்டு கோடியை நெருங்கி வரும் மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ்  உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.  தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் நடந்து  வந்தாலும் மருத்துவத் துறையினரின் சிறப்பான சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 98 லட்சத்தை … Read more

அமெரிக்காவில் சரமாரியாக அதிகரிக்கும் போகும் கொரோனா

அமெரிக்காவில் சரமாரியாக அதிகரிக்கும் போகும் கொரோனா

மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களான கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்ஸஸ் ஆகியவற்றில் நோய்த்தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நீண்ட விடுமுறையான இவ்வார இறுதியில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்குப் புதிதாக 44,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவின் 22 மாநிலங்களில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வாரம் நீண்ட விடுமுறை என்பதால் மக்கள் குடும்பங்களுடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது 22 மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது, … Read more

கொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல

கொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல

உலக நாடுகள் அனைத்துக்கும் தற்போது மிகுந்த தலைவலியாக இருப்பது கொரோனா வைரஸ்தான். இந்த வைரசால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் 9,459 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அங்கு 128 பேர் இறந்துள்ளனர். மலேசியாவில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் அந்நாட்டில் 62 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த … Read more

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்த வித முடிவும் எடுக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றன.  ஒருபக்கம் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் , அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி … Read more

ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 … Read more

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா கொரோனா தடுப்பூசி?

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். எனினும் ரஷ்ய தடுப்பூசியின் செயல் திறன் பற்றி நிபுணர்கள் சந்தேகம் … Read more

கொரோனா வைரஸால் இத்தனை பேர்தான் குணமாகியுள்ளனரா?

கொரோனா வைரஸால் இத்தனை பேர்தான் குணமாகியுள்ளனரா?

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரிய இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசால் அனைத்து துறைகளும் மிகுந்த நஷ்டத்தை அடைந்து வருகிறது. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடி எண்பதாயிரதிற்கும் … Read more

பிரேசிலில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பாதிப்பா?

பிரேசிலில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பாதிப்பா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மனித குலத்தின் இயல்பு வாழ்க்கையையும், அரசுகளின் சுமுக செயல்பாட்டுக்கும் இந்த கொரோனா தொடர்ந்து தடை போட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ள பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,521 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மேலும் 447 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4,137,521 ஆகவும், உயிரிழப்பு … Read more

கொரோனா குழந்தைகளின் இந்த உறுப்பை பாதிக்கிறதா?

கொரோனா குழந்தைகளின் இந்த உறுப்பை பாதிக்கிறதா?

கொரோனா வைரஸ் குழந்தைகளையும் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் குழந்தைகளுக்கு எளிதில் கொரோனா தொற்று பரவாது என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் நடந்த ஆய்வில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ், அறிகுறிகளை காட்டாமலேயே பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச்செய்யும் … Read more

கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் இத்தனையாவது இடமா?

கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் இத்தனையாவது இடமா?

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 2.7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8.86 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 14-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.25 லட்சத்தை நெருங்குகிறது.