கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே!

Rabies vaccine instead of corona vaccine! Usher people!

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் தடுப்பூசி ! உஷார் மக்களே! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் ஆகியும் மக்களை விடாது துரத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போட்ட வர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று பெண்மணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் … Read more

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.தற்போது … Read more

சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!!

Pakir information of the health department! Today's corona situation !!

சுகாதாரத்துறையின்  பகீர் தகவல்! இன்றைய கொரோனா நிலவரம்!! இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதனால் மக்கள் பீதில் இருந்தனர். 3 மாதம் ஊரடங்கு காரனமாக மாக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பதிக்கப்பட்டது. பிறகு  சிறிய தளர்வுகள்  ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே அச்சம் குறைந்த நிலையில் தற்போது கொடூர கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்து வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 59,118 பேருக்கு … Read more

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்,  … Read more

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை - மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் உடன் அனைத்து துறைகளும் 50% இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று முழுமையாக சரி செய்யப்படாத காரணத்தினால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலரும் அதை பற்றி எந்த ஒரு கலக்கமும் இன்றி எப்பொழுதும் போல் பொது இடங்களில் நடந்துகொள்கின்றனர். இந்த செயல்களை கண்டித்து மதுரை  உயர் நீதிமன்றம் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், … Read more

தேமுதிக கட்சி விஜயகாந்திற்கு சிகிச்சை – மியாட் மருத்துவமனை தகவல்!

தேமுதிக கட்சி விஜயகாந்திற்கு சிகிச்சை - மியாட் மருத்துவமனை தகவல்!

தேமுதிக கட்சி விஜயகாந்த் அவர்களுக்கும் அவரது மனைவி பிரேமலதா அவர்களுக்கும் அண்மையில் கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.  உடல் நிலையிலும் சீரான முன்னேற்றம் கண்டறிந்த பின்னரே வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நேற்று இரவு திடீரென்று விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். சென்னையில், நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட்  மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்திற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் – என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் - என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.  ராணுவ மருத்துவமனையில் அவர் நான்கு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் வெள்ளை மாளிகையை வந்தடைந்தார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதிபர் டிரம்ப்  அமெரிக்க மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். தற்போது தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் “கொரோனா தொற்று என்பது, பருவ காலங்களில் வரும் … Read more

பிரபல பாடகருக்கு கொரோனாவா? யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்!!!

பிரபல பாடகருக்கு கொரோனாவா? யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்!!!

பிரபல பின்னணி பாடகரான  எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நாட்களுக்கு முன்  உடல் குறைவினால் சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு மைல்டு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரபல பின்னணி பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 16க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  அதுமட்டுமல்லாமல்,6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதோடு ஏராளமான பிலிம் ஃபேர் … Read more