கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! ஆளும் கட்சியினர் அதிருப்தி!

கடந்த சட்டசபை தேர்தலில் 10 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அரியணையை கைப்பற்றினாலும் திமுகவை பொறுத்தவரையில் கோவையில் 10 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.ஆளும்கட்சியாக இருந்ததால் பல்வேறு பராக்கிரமங்களை செய்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், அதற்குள் கோயமுத்தூர் மாவட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அதிமுக பாஜக தேமுதிக மக்கள் நீதி மையம் … Read more

ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!! 

Jayakumar: Ministers are the answer to Stalin as CM!! The puppet principal can only shake his head!!

ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!! திமுக வாரிசு அரசியல் நடத்தவில்லை என்று சொல்பவர்களுக்கு நடந்து முடிந்த உள்கட்சி தேர்தல் பதிலளிக்கும். ஏனென்றால் திமுகவில் தனக்குப் பின்பு தனது வாரிசுகள் வராது என்று ஓர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் அவரின் குடும்பம் முழுவதுமே தற்பொழுது அரசியலில் தான் உள்ளது. இது குறித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.இவர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று … Read more

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் அதிகார மோதல் உண்டாகி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், பன்னீர்செல்வம் தொடர்பாகவும் எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் உண்டான அதிகார மோதல் சுமார் ஐந்து வருடங்கள் கடந்த பிறகும் முடிவுக்கு வராத நிலை தான் இருக்கிறது. கண்ணாடியில் விழுந்த விரிசல் போல இருந்த ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டவரின் முதல் … Read more

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு! சிபிஐயிடம் வசமாக சிக்கிய ராசா அதிர்ச்சியில் திமுக!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரும் தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்வுத் துறை அமைச்சர் ராசா மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏழு வருடங்கள் பழமையான இந்த வருடத்தின் விசாரணை முடிவடைந்ததும் சமீபத்தில் சென்னையில் இருக்கின்ற சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு … Read more

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? தமிழிசையை வறுத்தெடுத்த திமுக!

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பல்வேறு தரப்பினர் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். அந்த வகையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்க பட்டதற்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்த புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அதன் பிறகு தெரிவித்த ஒரு சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தினர். அதாவது தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான நிலைக்கு வருவது … Read more

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

என்ன திமுக பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையா? ஏன் தெரியுமா?

திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச் செயலாளர் ஆக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளராக டி ஆர் பாலு தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அவர் பேசியதாவது தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி … Read more

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்! பொதுக்குழு மேடையில் புலம்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய இந்த உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து திமுகவின் பொதுக்குழு மேடையில் பேசியபோது அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள். பலமுனை … Read more

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

என்ன மேடம் நீங்களே இப்படி பேசலாமா? தமிழிசையை வாரிய திமுக!

முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2து முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டி ஆர் பாலு அவர்களும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி, பொன்முடி, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு பெண் உயர்வான … Read more

எப்பா அந்த செருப்பை எடுத்துட்டு வா! பொது மேடையில் திமுக பொருளாளரால் உண்டான சர்ச்சை!

எப்பா அந்த செருப்பை எடுத்துட்டு வா! பொது மேடையில் திமுக பொருளாளரால் உண்டான சர்ச்சை!

திமுகவின் பொதுக்குழு கூட்ட மேடையில் தற்போதைய திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு அவர்களின் காலணியை தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது அதில் புதிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை அறிவித்து கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணாதுரை, கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படத்திற்கு மலருதுவை மரியாதை செய்தனர். அதற்கு முன்னர் தங்களுடைய … Read more

அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு  மிகவும் பயனுள்ள திட்டம்!!

Anbil Mahesh: Important Information about NEET Exam!! It will be useful for students!!

அன்பில் மகேஷ்: நீட் தேர்வு குறித்த முக்கிய தகவல்!! மாணவர்களுக்கு  மிகவும் பயனுள்ள திட்டம்!! திமுக கூறியிருந்த அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது வரை நீட் தேர்வு விலக்கு அளிக்க முடியவில்லை. இது குறித்து பல முறை மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித பயனளிக்கவில்லை. அதற்கு மாறாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு தான் வருகிறது. பலருக்கும் திமுக கண்துடைப்பு நாடகம் ஆடுகிறதா … Read more