தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more

முடி வெட்டுவதற்காக வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கிய சலூன் கடை உரிமையாளர்! போக்சோவில் கைது செய்த காவல்துறையினர்!

கோயமுத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சார்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் ஒரு சலூன் வைத்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக அவருடைய கடைக்கு அழைத்து வந்திருக்கிறார். மணிகண்டன் முதலில் அவருடைய மகனுக்கு முடி வெட்டிவிட்டு அதன் பின்னர் அவருடைய மகளுக்கு முடி விட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பணம் எடுப்பதற்காக அந்த இளம் பெண் வெளியே புறப்பட்டு … Read more

முதல்வர் வாழ்த்து சொல்வதில் ஏன் பாரபட்சம் காட்டுகிறார்! தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

மதச்சார்பற்ற தன்மையை தமிழக முதலமைச்சரும் கடைபிடிக்க வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கோவையில் தெரிவித்திருப்பதாவது, இணையதள ரம்மி சூதாட்டம் நடைபெற கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஏன் தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடமும் சில சட்ட முன் வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதை பார்த்து தான் கையெழுத்து போட வேண்டும். ஆளுநருக்கு கையெழுத்து … Read more

தாயின் திடீர் மரணத்தால் விரக்தி அடைந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை! திருப்பூர் அருகே சோகம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து இருக்கின்ற கரைப்புதூர் காளிநாதன் பாளையம் கிராமத்தை சார்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி . அங்காத்தாள் இந்த தம்பதியரின் மகன் 25 வயதான ஜெகதீஷ் இவர் ஒரு தொழிலாளி என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜெகதீஷின் தாயார் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். தன்னுடைய தாயின் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்த ஜெகதீஷ் அவருடைய மறைவின் காரணமாக, மிகுந்த வேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. ஜெகதீசுக்கு அவருடைய உறவினர்கள் … Read more

மங்களூர் குண்டு வெடிப்புக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? காவல்துறையினர் அதிரடி விசாரணை!

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்திய முகமது ஷாரிக் கோவை தனியார் விடுதியில் கௌரி அருண்குமார் என்ற பெயரில் தங்கி இருந்ததும், போலியான முகவரியை வழங்கி இருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது அது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது சாரிக் தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தங்கி அதன் பிறகு மங்களூருக்கு … Read more

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!!

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!! கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்காரவை சஜீவ் கருண் என்பவர் பொள்ளாச்சி கோட்டம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தை ஒன்று தொடங்கினார்.இவர் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும்,தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் ஆசை வார்த்தையை நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவன் என்பவர் அந்நிறுவனத்தில் 96 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். சில … Read more

ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். ஆனால் அந்த கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த நபர் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும், அவரை தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தும் … Read more

அந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுக்காவிட்டால் உண்மை வெளிவந்திருக்காது! அண்ணாமலை அதிரடி!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்ததால்தான் உண்மை வெளியே வந்தது என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை பாஜக கையில் எடுத்ததால் தான் உண்மை வெளியே வந்திருக்கிறது. இல்லாவிட்டால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பம் பாவம் என்று தெரிவித்து அவர்களில் ஒருவருக்கு திமுக அரசு வேலை வழங்கியிருக்கும் ஹிந்தி திணிப்பு … Read more

கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற கார் விடுப்பு சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர வைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. கோவை டவுன்ஹால் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கார் ஒன்று தீ பற்றி எரிந்தது. அதில் இருந்த ஒருவர் … Read more

ஜமேஷா முபின் வீட்டில் சிக்கியது அதி பயங்கர வெடி பொருள்! நல்லவேளை இது நடக்கல பெருமூச்சு விட்ட காவல்துறையினர்!

கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் தங்கி இருந்த இடங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர் அப்போது வெடிகுண்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட 75 கிலோ வெடி பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1.5 கிலோ பெண்டா எரித்ரிட்டோல் டெட்ராநைட்ரேட் என்ற அதி பயங்கர வேதிப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவித்ததாவது பெண்டா எரித்ரிட்டோல் டெட்ரா நைட்ரேட் என்பதை சுருக்கமாக பிஈடிஎன் என்று குறிப்பிடுவார்கள். … Read more