கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!!

Edappadi Palaniswami is politicizing the issue of death due to drinking alcohol - Mamaka party leader!!

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார் – மமக கட்சி தலைவர்!! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பிரச்சனையை வைத்து அதிமுக தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அரசியல் செய்கிறார் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 13 நபர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ் நாட்டையே பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மேலும் 66 பேர் மருத்துவமனையில் … Read more

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Zero and zero add up to zero!! Edappadi Palaniswami Review!!

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!! அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களும் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சியில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் … Read more

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம். தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்ச்சிகளுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை செய்தியில், கடந்த 2022-ஆம் ஆண்டு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 பேர் மரணமடைந்த சம்பவத்தை 2022-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, 5.5.2023 அன்று … Read more

வரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!

Karnataka election!! EPS OPS Confused Again!

கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்! கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர். அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் … Read more

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!!

Double leaf symbol favors Edappadi! OPS to face setback again!!

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!! அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. இந்த யுத்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தொடர்ந்து வருகின்றார். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!  கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதுமே அங்கு ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வந்தன. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக படு மும்முரமாக செயல்பட்டு, அதற்கேற்றால் போல தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்தது. இதனிடையே கர்நாடக பாஜக முன்னனி தலைவரான ஜெகதீஸ் ஷெட்டருக்கு இம்முறை … Read more

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்! 

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்! 

எடப்பாடிக்கு புதிய சிக்கலை உருவாக்கிய பன்னீர்செல்வம்! இதிலிருந்து மீண்டு வருவாரா? ஈபிஎஸ்!  அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் இரட்டை தலைமை பதவியை உருவாக்கி ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்தெடுக்கபட்டபின், அவர்களுக்குள் ஏற்பட்ட அதிகார பிரச்சனையில் பல சிக்கல்கள் கட்சியில் உருவாகியது.  இதனை தொடர்ந்து ஒற்றை தலைமை வேண்டும் என பழனிசாமி தரப்பினர் கூறிவந்தனர். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. இதில் கட்சிக்கு ஒற்றை தலைமை … Read more

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் 

எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்ல வேண்டும்! அண்ணாமலையை தூண்டி விடும் ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுகவில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பன்னிர் செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், … Read more

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி?

அதிமுக குறித்து உதயநிதி கடும் விமர்சனம்! தக்க பதிலடி கொடுக்குமா எதிர்க்கட்சி? அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே கடுமையான நீதிமன்ற போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி எடப்பாடி அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கட்சி மற்றும் அதிகார மைய பிரச்சினை குறித்து அடிக்கடி இருவரும் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி … Read more

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு … Read more