தேர்தல் தோல்வியின் எதிரொலி! ஆளுனருக்கு பறந்த ராஜினாமா கடிதம்!

தேர்தல் தோல்வியின் எதிரொலி! ஆளுனருக்கு பறந்த ராஜினாமா கடிதம்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது .அமைச்சர்கள் சுமார் 10 பேர் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி … Read more

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக திமுக என்ற தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இல்லாமல் அந்த கட்சிகள் எதிர்கொண்ட முதல் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டசபை … Read more

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 2 ஆம் தேதியான நேற்று எண்ணப்பட்டது நேற்று காலை 8 மணி அளவில் ஆரம்பித்த வாக்கு எண்ணிக்கை தற்போது வரையில் நடைபெற்று … Read more

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக அதிமுகவில் சார்ந்தவர்கள் தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பை நம்பி யாரும் மனம் தளர்ந்து விட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே நோய் தொற்று நோய் பரவல் ஆங்காங்கே ஆரம்பிக்க தொடங்கியது. அவ்வாறு ஆரம்பித்த அந்த நோய் தொற்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாடு முழுவதும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியது.அதனை அடுத்து சென்ற வருடம் மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு இந்த நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் … Read more

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதோடு தமிழகத்துடன் அன்றைய தினமே புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. சென்ற பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி … Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 15 ஆயிரத்து 830 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 உயர்ந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 549 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இந்த நோயில் … Read more

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!

தற்போது நாடு முழுவதும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. அதே போல பல மாதங்களுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மருந்து, காய்கறி, போன்ற அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற எந்த கடைகளும் பெரிய அளவில் செயல்படுவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. அதேபோல … Read more

திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு!

eps

திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு! தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தேர்தல் முடிந்து இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருப்பதால், தமிழகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலம், அவரால் எந்தவித முடிவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் அதிகாரிகள் மாறிமாறி ஆலோசனை நடத்தி, … Read more

தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!

தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!

தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.இதனை அடுத்து இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேற அதிவேகத்தில் தன்னுடைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் இந்த தொற்றின் பாதிப்பு மூன்று லட்சத்தை கடந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை … Read more