ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!

0
83

தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்காரணமாக அதிமுகவில் சார்ந்தவர்கள் தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பை நம்பி யாரும் மனம் தளர்ந்து விட வேண்டாம் என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதிமுகவின் அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். நாஞ்சில் சம்பத் திமுகதான் ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்பை கேட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் கேள்விப்பட்ட வரையில் திமுக வெற்றி பெறும் என்பது தான் உன்னை அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறாது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கட்சிதான் பெரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று முதல்வரும், துணை முதல்வரும், அறிக்கை விட்டிருப்பது ஏதோ அவர்களின் விளையாட்டை விளையாடும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே திமுகவினர் விழிப்புணர்வு உடனிருக்க வேண்டும். பெட்டிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் ஆட்சியை தக்கவைக்க இருவரும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத்.