அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல பாஜகவுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்து சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முழுவதுமே காரைக்கால் விழுப்புரம் போன்ற இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கின்றார். இதனை அடுத்து நேற்று … Read more

எடப்பாடி காட்டிய அதிரடி! தெரிந்துதான் செய்தாரா?

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டசபையில் அறிவித்த பல அதிரடியான அறிவிப்புகள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமடைய செய்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வெகு காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சி காலத்தில் … Read more

ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் மற்றும் 6 சவரன் வரையில் அடகு வைத்த நகை கடன் அதோடு மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், முதலமைச்சர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தும் விதமாக பற்பல அறிவிப்புகளை வெளியிட்டு வெட்டுகின்றார் . அந்த வகையில், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி … Read more

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் விருப்பத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று முதல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரையில் அனுதினமும் மாலை 5 மணி வரையில் விருப்ப மனுக்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் போட்டியிட ரூபாய் 15,000 செலுத்தி … Read more

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!

அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த விதத்தில் திருவண்ணாமலையில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற செல்லூர் ராஜு அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அவர் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் செயல்பாடு நன்றாக இருப்பதாக கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் என்று தெரிவித்திருப்பது சர்ச்சையை உண்டாக்கி … Read more

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள். அதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1683 கோடி ஒதுக்கீடு … Read more

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!

சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ,எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைத்தும் வருகின்றார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்த சமயத்தில் அவர் மக்களிடையே உரையாற்றி இருக்கிறார். அங்கே அவர் உரையாற்றியதாவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் நாட்டிலேயே தமிழகம் தான் … Read more

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சி நாள்தோறும் தமிழக மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை தமிழக சட்டசபையில் அதிமுக அரசு தன்னுடைய கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது. ஆளுநர் உரையுடன் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டம் ஆரம்பித்த நிலையில், விவசாயிகள் கடன் தகுதி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை … Read more

பெண்களின் ஓட்டை அள்ளுவதற்கு முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதோடு அதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து வருகின்றார். ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைகளையும் அறிந்து கொண்டு அதற்கான பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 16.43 லட்சம் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல 24 மணி நேரமும் … Read more

வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட 1500வழக்குகள் பதிவாகியிருக்கிறது ஒருசில வழக்குகளை தவிர எல்லா வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றது என்று தெரிவித்திருக்கிறார். முதல்வர் அவர்கள் … Read more