இலங்கையிலும் நடைபெற உள்ள பிரிமீயர் லீக்

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியது. இந்த தொடர் உலக அரங்கில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் போர்டும் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி்வைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு 28-ந்தேதி தொடங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. ஆனால் வெளிநாட்டு … Read more

மீனவர்கள் பற்றி இலங்கை அதிபர் இப்படி பேசினாரா?

இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்ற பின்னர் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.  வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை விதித்து, உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், உரிய அனுமதி இல்லாமல் இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்று அவருடைய மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அவருடைய சகோதரரான கோத்தபய ராஜபக்சே அதிபராக உள்ளார். 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் புதிய அமைச்சரவை குழு பதவி ஏற்றது. நிதி மற்றும்  மூன்று முக்கிய துறைகள் மகிந்தா ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் புத்த மத விவகாரத் துறையையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே நீர்பாசனத் துறையில் கேபினட் … Read more

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ராஜபக்சே. இந்த வெற்றியை தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக இன்று கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் பதவி ஏற்க உள்ளார்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்

பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளைய தினம் புதிய பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார். மகிந்த ராஜபக்சே களனி விகாரையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். இதனையடுத்து கண்டி தலதா மாளிகையில் எதிர்வரும் 14 ஆம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

இலங்கையில் பொதுத் தேர்தல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையில் 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த  பாராளுமன்ற  தேர்தலில் ராஜபக்சே  வெற்றி பெற்றார் ஆனால் எதிர்பாரத விதமாக  பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.  அதன் காரணமாக  மார்ச்சில்   நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு … Read more