தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் விருப்பத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று முதல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரையில் அனுதினமும் மாலை 5 மணி வரையில் விருப்ப மனுக்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் போட்டியிட ரூபாய் 15,000 செலுத்தி … Read more

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!

தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் பட்ஜெட் உரையை வாசிக்க விடாமல் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தார்கள். அதோடு பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேறிவிட்டார்கள். அதோடு கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1683 கோடி ஒதுக்கீடு … Read more

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்! நிதி அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

நடப்பு சட்டசபையின் பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு 2021 – 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சரும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னையை தனித்துவம் மிக்க ஒரு நகராக மாறுவதற்கு 3140 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு 229 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று … Read more

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சி நாள்தோறும் தமிழக மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை தமிழக சட்டசபையில் அதிமுக அரசு தன்னுடைய கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது. ஆளுநர் உரையுடன் இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டம் ஆரம்பித்த நிலையில், விவசாயிகள் கடன் தகுதி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை … Read more

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக பிரம்மாண்ட மாநாடு! அதிர்ச்சியில் திமுக!

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்வரும் 28 ஆம் தேதி ஒரு பிரமாண்டமான மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ,பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் தேமுதிக போன்ற அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே … Read more

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

தமிழக இடைக்கால பட்ஜெட்டை எதிர்வரும் 23 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழக சட்டசபையின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஆரம்பமானது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் … Read more

குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

குழி பறித்த தேமுதிக! துணை முதல்வர் சொந்த ஊரிலேயே மண்ணை கவ்விய அதிமுக!

2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருக்கின்ற 16 வார்டுகளில் திமுக 8 இடங்களில் அபார வெற்றியடைந்தது. அதிமுக 6 இடங்களிலும் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக காய் நகர்த்தியது .ஆனால் திமுக சார்பில் வெற்றியடைந்த 8வது வார்டு உறுப்பினர் செல்வம் அதிமுகவிற்கு தாவினார். இதன் … Read more

கனவு காணாதீர்கள்! ஓபிஎஸ் போட்ட அதிரடி ட்வீட் அதிர்ந்து போன திமுக!

கனவு காணாதீர்கள்! ஓபிஎஸ் போட்ட அதிரடி ட்வீட் அதிர்ந்து போன திமுக!

ஊழலும் திமுகவும் வெவ்வேறு இல்லை என்பதை மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள் என்றும், இரட்டைஇலை மீண்டும் மீண்டும் மலர்வதை தமிழகத்தின் தீய சக்திகளால் எப்போதும் தடுக்க இயலாது என்றும், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார், இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் உலக அரங்கில் மிகப் பெரிய அவமானத்தை … Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிமுக தலைமைக்கழகம்! பரபரப்பானது தேர்தல் களம்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிமுக தலைமைக்கழகம்! பரபரப்பானது தேர்தல் களம்!

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனாலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதிமுக மற்றும் திமுக என்ற பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்ற தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்வது மற்றும் வேட்பாளர் அறிவிப்பாக இருந்தாலும் எப்பொழுதும் அதிமுக எல்லோருக்கும் முன்பாகவே அனைத்தையும் செய்து வந்தது அது போல இந்த தேர்தலிலும் எல்லோருக்கும் முன்னதாகவே அந்த கட்சி உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம் … Read more