• Home
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
keep your memories alive
Home » Set on fire
Tag:

Set on fire

Breaking NewsCrimeDistrict NewsSalemState

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

by Savitha May 24, 2023
written by Savitha

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!!

சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் இரண்டு மகளுக்கு பிரித்து தரவேண்டும் என இருந்த நிலையில் மகன் லோகநாதன் நிலத்தை அபகரித்துக் கொண்டு தர மறுப்பதாக குற்றம்சாட்டினார். மாவட்ட நிர்வாகம் எனது மகன் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிசந்திரன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அவரிடம் நடத்திய விசாரணையில்,பெரியபுத்தூர் பகுதியில் ஹரிச்சந்திரனுக்கு சொந்தமான வீட்டை பாதாள சாக்கடை திட்டத்திற்காக  இடித்துள்ளதாகவும்,இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் புகார் அளித்த நிலையில் புகார் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வம் அவரது மகன் செந்தில் மற்றும் உறவினர்கள் என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார் .

May 24, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Breaking NewsNationalPolitics

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எல்.டி.எப் அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன்!!

by Savitha April 4, 2023
written by Savitha

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எல்.டி.எப் அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன்!!

ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாத செயல், மூல காரணத்தை கண்டறிய வேண்டும்’என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எப்) அமைப்பாளர் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.தேசிய மற்றும் மாநில அளவில் காவல் துறை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் கோழிக்கோடு எலந்தூர் அருகே வந்த போது மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த சஹாரா(2), ரஹ்மத், நெளபிக் ஆகிய 3 பேர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

தீ வைத்து எரித்ததில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என எல்.டி.எப்., அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் தெரிவித்துள்ளார். கேரளாவின் அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம்.மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கேரளாவின் அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம். கேரளா போன்ற மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பில்லை. இதற்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் இதன் பின்னணியில் தீவிரவாத செயல் இருப்பதாகவும் தேசிய மற்றும் மாநில அளவில் காவல் துறை எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்தார்.

April 4, 2023 0 comments
0 FacebookTwitterPinterestEmail
After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?
Breaking NewsCrimeState

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

by Parthipan K August 12, 2022
written by Parthipan K

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர்.

மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் தான் ரேணுகா பிரசாத் வயது 22.இவர் பி.யு.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.கல்லூரி மாணவரான இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததாக தெரிகிறது.

அந்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல தன்னை பாவித்து கொள்வது வழக்கம். பிறகு அதன் போல் தானும் நடித்து வந்துள்ளார்.இந்நிலையில் சமீபகாலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியாகி இருந்த அருந்ததி திரைப்படத்தை ரேணுகா பிரசாத் பார்த்து வந்துள்ளார்.

அதை பார்த்த அவர் மறுபிறவி எடுத்து விடலாம். அந்த படத்தில் அனுஷ்கா தனது தலையில் தேங்காய்களால் அடித்து உயிரை மாய்த்து கொள்வார். பின்னர் அனுஷ்கா மறுபிறவி எடுத்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் தான் அனுஷ்காவை போல உயிரிழந்து மறுபிறவி எடுத்து விடலாம் என்று கருதிய ரேணுகா பிரசாத் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

சற்று நேரத்தில் அதே இடத்தில் உடல்கருகி அவர் உயிருக்கு போராடினார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரேணுகா பிரசாத் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்தி கொடுங்கள் என்று தந்தையிடம் கெஞ்சல் மறுபிறவி எடுப்பதற்காக ரேணுகா பிரசாத் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிருக்கு போராடினார்.

அவரது நிலையை கண்டு தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அப்போது ரேணுகா பிரசாத் தனது தந்தையிடம் எனக்கு முக்தி கொடுங்கள்!..முக்தி கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டார். அப்போது கண்ணீர்விட்டு அழுத தந்தை ரேணுகா பிரசாத்திடம் நான் உன்னை அருந்ததி படம் பார்க்க வேண்டாம் என்று கூறினேன்.

நீ கேட்கவில்லை என்று கூறியதுடன், நான் எப்படி உனக்கு முக்தி கொடுக்க முடியும் என்றும் கூறினார். இந்த உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. இந்த சமூக திரைபடங்கம் அனைத்துமே ரசித்து பார்ப்பதற்கு மட்டுமே?மேலும் இது போன்ற செயலை இனி எவரும் நினைத்து பார்க்கவே கூடாது என இணையதளங்களின் சிலர் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர்.

August 12, 2022 0 comments
0 FacebookTwitterPinterestEmail

Recent News

  • ரேஷன் அட்டையில் இந்த எழுத்து இருக்கா; அரசு சொன்ன ஷாக் நியூஸ்!
  • பள்ளி மாணவர்களுக்கு பறந்த உத்தரவு; இனி இப்படி பண்ணா சிறுவர் சீர்திருத்த பள்ளி தான் கதி!
  • அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையா; இந்த சான்றிதழ் உடனே உங்க கையில் கிடைக்கும்!

Category

  • Asia Cup 2022
  • Astrology
  • Beauty Tips
  • Breaking News
  • Business
  • Celebrity Diwali
  • Chandrayaan-3
  • Chennai
  • Cinema
  • Coimbatore
  • Crime
  • District News
  • Diwali Celebration
  • Diwali History
  • Diwali Recipe
  • Editorial
  • Education
  • Employment
  • Entertainment
  • FIFA World Cup 2022
  • Health Tips
  • International Girl Child Day 2022
  • IPL 2023
  • IPL 2025
  • IPL Mini Auction 2023
  • Life Style
  • Madurai
  • Mental Health Day 2022
  • National
  • News
  • Opinion
  • Politics
  • Religion
  • Salem
  • Sports
  • State
  • T20 World Cup
  • Technology
  • Tiruchirappalli
  • TV Shows
  • Uncategorized
  • Union Budget 2025
  • Women's Equality Day
  • World
  • Facebook
  • Twitter

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Home