மீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்

மீண்டும் சென்னை அணியில் இணைந்த முக்கிய வீரர்

சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி தாமதம் ஆனது. 2 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் கடந்த 4-ந்தேதியில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹர் அதில் இருந்து முற்றிலும் குணமடைந்து உள்ளார். இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மீண்டும் இணைந்து  … Read more

இதுதான் உலகின் சிறந்த போர் விமானம் – எம்எஸ் டோனி

இதுதான் உலகின் சிறந்த போர் விமானம் - எம்எஸ் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இறுதியாக சேர்க்கப்பட்ட விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவுக்கு  வாழ்த்துக்கள். ரபேல் ‘மிராஜ் 2000’-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்

செரீனா வில்லியம்சனுடன் அரையிறுதியில் மோத போகும் இந்த வீராங்கனை

செரீனா வில்லியம்சனுடன் அரையிறுதியில் மோத போகும் இந்த வீராங்கனை

செரீனா அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர்சை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நவோமி ஒசாகா அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் இன்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர்செட்களில் எலிஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். … Read more

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

ஹர்பஜன் சிங்கிடம் சென்னையை சேரந்தவர் மோசடியா

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தன்னிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை திரும்பப் பெற்றுத்தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் அளித்திருந்த புகார் மனுவில் சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். தொழிலை விருத்தி செய்யப்போவதாகத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி … Read more

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

சுவீடன் அணியுடன் சதம் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ … Read more

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த வீராங்கனை

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை தோற்கடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதே போல் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் புதின்சேவாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். ஒரு அரைஇறுதியில் நவோமி ஒசாகா-ஜெனிபர் பிராடி … Read more

மிகுந்த சிரமத்திற்கு ஆளாக போகும் வேகப்பந்து வீச்சாளர்கள்

மிகுந்த சிரமத்திற்கு ஆளாக போகும் வேகப்பந்து வீச்சாளர்கள்

வேகப்பந்து வீச்சாளாரான முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்தியாவை ஒப்பிடும்போது  துபாயில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விசயங்களை நாம் நினைப்பில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளங்கள் மாறுபட்டதால் கடினமானதாகும். ஆகவே, பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது. ஆனால் அதை நிர்வகிக்க முடியாது என்பது அவ்வளவு கடினம் அல்ல. நாம் எப்படி நம்முடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம் என்பதை சார்ந்தது. வீட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வந்ததை சிறப்பானதாக உணர்கிறோம். நமக்கு … Read more

யுவராஜ் சிங்கின் முடிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்

யுவராஜ் சிங்கின் முடிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் … Read more

ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளித்தாரா?

ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளித்தாரா?

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு கருத்து தெரிவித்திருந்த ரசிகர் ஒருவர் ‘‘நீங்கள் பும்ரா போன்று சிறந்தவர் இல்லை என்று கூறினார்.  அதற்கு பதில் அளித்த ஸ்டூவர்ட் பிராட் எனக்கு பும்ராவை பிடிக்கும் நீங்கள் கூறுவதை நான்  ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஒப்பிட வேண்டிய தேவையில்லை. சிறந்த பந்து வீச்சாளர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்’’என பதில் அளித்துள்ளார். ரசிகர்கள் ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளிப்பார் … Read more

தமிழக அரசு வெளியிட்ட விளையாட்டு நெறிமுறைகள்

தமிழக அரசு வெளியிட்ட விளையாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்குள் தொடக்க கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதி. மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை. மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.