டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ மெக்ஸிகோஎல்லை வரை பரவியுள்ளது. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று டிரம்ப் நம்புகிறார். அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார். பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், … Read more

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பரவிய காட்டுத் தீயின் புகை

அமெரிக்காவின் மேற்குக் கரை மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயின் புகை ஐரோப்பிய நாடுகளைச் சென்றடைந்துள்ளது. புகை பரவுவதை துணைக்கோளத் தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கண்காணிப்பு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா, வாஷிங்டன், ஆரெகன் ஆகிய மாநிலங்களில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவியிருப்பதால் புகையின் அளவு அதிகரித்துள்ளது. அது சுமார் 8,000 கிலோ மீட்டர் தாண்டி ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நாடுகளை அடைந்துள்ளது.  

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  பக்கங்களில் எதையும் பதிவு செய்யப்போவதில்லை மற்றும் “Stop Hate for Profit” எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் … Read more

டிரம்ப் மீது நம்பிக்கை இழந்த மக்கள்

அமெரிக்காவின் நற்பெயர் மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாகக் கருத்தாய்வு கூறுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் பியூ ஆராய்ச்சி மையம் கருத்தாய்வை  நடத்தியது. 13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர். அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது. நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள … Read more

அமெரிக்காவின் நிலைமை விரைவில் சீராகும் – டிரம்ப்

அமெரிக்காவில் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 3 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்  காட்டுத்தீயால் உயிரிழந்தனர். ஆரெகன் மாநிலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் காணவில்லை. குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள்  பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று திரு டிரம்ப் நம்புகிறார்.

கலிபோர்னியாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்

அதிசயமும், அதிர்ச்சியும் மனிதன் தன் வாழ்நாளில் ஒரு தடைவையாவது காண முடியும் அதுவும் அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு அந்த நிகழ்வை அடிக்கடி காண்பார்கள்.  கலிஃபோர்னியாவின் பல பகுதிகளில் மக்கள் காலையில் எழுந்தவுடன் ஆரஞ்சு நிற ஆகாயத்தைப் பார்த்த மக்களிடையே உலக அழிவு பற்றிய பயம் ஏற்பட்டது. காலை நேர வானம் இருள் சூழ்ந்திருந்தது; அதைப் பார்ப்பதற்கு இரவு நேரம் போலிருந்ததாக மக்கள் குறிப்பிட்டனர். சில இடங்களில் பனித்துளிகள் போல் சாம்பல் வானத்திலிருந்து தரையில் விழுந்தன. பயங்கரத் தோற்றத்துடன் … Read more

அதிர்ச்சி தகவல் : ஒரே நாளில் 7424 பேருக்கு கொரோனா உறுதி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் 197395 பேர் இதுவரை இறந்துள்ளனர். அடுத்தாக இந்தியாவில் 77506 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 702088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் 7,424 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொலம்பியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை  22518  ஆக உயர்ந்துள்ளது.  

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய ரஷ்ய வீரர்

அமெரிக்கா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர்களான 3-ம் நிலை வீரர் டேனில் மெட்வெதேவ் – 10-ம் நிலை வீரரான ஆன்ட்ரே ருப்லேவ் ஆகியோர் மோதினார்கள். முதல் செட்டில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 7(6) – 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-3 என மெட்வெதேவ் எளிதாக கைப்பற்றினார். 3-வது செட்டில் ஆன்ட்ரே ருப்லேவ் … Read more

சீனாவுக்கு ஆப்பு வைத்த டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல் கொரோனா வைரசுக்கு பின் உச்சத்தை தொட்டுள்ளது.  இந்த மோதலுக்கு பின் ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன தூதரகம் மூடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக ஷெங்டூ நகரில் செயல்பட்டுவந்த அமெரிக்க தூதரகத்தை உடனடியாக மூடும்படி சீனா உத்தரவிட்டது. இதையடுத்து ஷெங்டூ தூதரகம் மூடப்பட்டது. இந்த விவகாரங்கள் இரு நாட்டிற்கும் இடையேயான விரிசலை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சீன நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தங்கி கல்வி பயின்று … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.