தமிழ்நாட்டில் கரையை கடக்கும் புயல்!! இந்த மாவட்டங்களுக்கு கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

Storm crossing the coast in Tamil Nadu!! Due to heavy rain in these districts, school holidays!!

வங்கக்கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறாமல் வலுவிழந்தது. இந்த சூழ்நிலையில் வலுவிழந்த … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை!!

Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் பிற்பகல் ஒரு மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சூழ்நிலையில் அதற்கு பெங்கல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இது பெங்கல் புயலாக மாறியதும் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க உள்ளது.

மேலும் இந்த புயலால் சென்னைக்கு அதிக பாதிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புயல் சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புயலானது கரையை நெருங்கும் சமயத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்க கடலில் உருவான இந்த பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்தின் சுமார் 15 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி நெல்லை கன்னியாகுமரி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more

தமிழகத்திற்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! அதிர்ச்சி கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தமிழகத்தில் வெப்ப அலைக்காற்று வீசி வருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், மக்கள் இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இளநீர், பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை குடித்து உடலை பேணிக்காக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது மக்களுக்கு சிறிது ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது, … Read more

இந்த மாதம் வெயில் எப்படி இருக்கும்? 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதெர்மேன்!

weatherman report may 2024

உலகம் முழுவதும் கால நிலை மாற்றத்தால் கடுமையான வெப்பம், கடுமையான மழை, கடுமையான புயல் என்று மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலைக்கு காரணம் மக்கள்தான் என்றாலும் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசரக் கட்டத்தில் உலக நாடுகள் உள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் கைகோர்த்து செய்தால் மட்டுமே வருங்காலங்களில் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்று சூழ்நிலை ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் தமிழகம் மற்றும் இந்தியாவில் … Read more