உலகின் மிகவும் ஆரோக்கியமான இடம்!! 120 வயதை தாண்டி வாழும் பல பேர்

உலகின் மிகவும் ஆரோக்கியமான இடம்!! 120 வயதை தாண்டி வாழும் பல பேர்

ஜப்பான் நாட்டில் ஒரு இடம் உள்ளது அங்கு மரணத்தையும் வென்ற மக்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு உடல் பாதிப்பும் இல்லாமல் 120 வயதையும் தாண்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.   ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா என்ற இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஆச்சரியம் கொடுப்பதாகவும் இருக்கும். இது ஜப்பானில் தெற்குப்பகுதியில் மிகவும் ஆரோக்கியத்துடன் பச்சை பசேல் என்று இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜப்பானின் சொர்க்க … Read more

“ரத்த நிலா” பூமியில் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிக்கும்! எந்த நாள் தெரியுமா?

"ரத்த நிலா" பூமியில் வழக்கத்தை விட அதிகமாக பிரகாசிக்கும்! எந்த நாள் தெரியுமா?

வானில் மிகவும் அரிதான ரத்த நிலா வருகின்ற 26 ஆம் தேதி பூமியில் தென்படும் என்றும் கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வருகிற 26-ஆம் தேதி பௌர்ணமியன்று வரப்போகின்றது..   இதுகுறித்து கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் திவாரி கூறியதாவது, சூரியன் பூமி சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் பொழுது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதை நாம் சந்திர கிரகணம் … Read more

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விமானப் போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.  நியூஸிலாந்தின் Air New Zealand விமான நிறுவனத்திற்குச் சுமார் 300 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் பல எல்லைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. Air New Zealand-இன் லாபம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 74 விழுக்காடு சரிந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குச் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறுவனம் கூறியது. Air … Read more

தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாகும். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த கொடிய வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா நேற்று முன்தினம் இந்த தொற்றுக்கு எதிராக நாங்கள்தான் முதன்முதலில் தடுப்பூசியை உருவாக்கினோம் … Read more

புதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது

புதிய அமைச்சரவை குழு பதவியேற்கிறது

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற்று அவருடைய மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது. அவருடைய சகோதரரான கோத்தபய ராஜபக்சே அதிபராக உள்ளார். 28 கேபினட் அமைச்சர்கள், 40 இணை அமைச்சர்கள் புதிய அமைச்சரவை குழு பதவி ஏற்றது. நிதி மற்றும்  மூன்று முக்கிய துறைகள் மகிந்தா ராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் புத்த மத விவகாரத் துறையையும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சே நீர்பாசனத் துறையில் கேபினட் … Read more

இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்

இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் … Read more

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் – அமெரிக்க வெளியுறவுத்துறை

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் - அமெரிக்க வெளியுறவுத்துறை

டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றதலிருந்து பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது எச்1பி விசாவுக்கு அமெரிக்கா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தாங்கள் பணியாற்றிய துறையில் மீண்டும் பணியாற்ற விரும்பினால் அவர்களுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தும். மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் – முன்னால் பிரதமர்

நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் - முன்னால் பிரதமர்

மலேசியாவின் முன்னாள் பிரதமரான மகாதீர் முகமது தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அந்த கட்சிக்கு பெஜூவாங்  என்று பெயர் வைத்துள்ளார்.  பெஜூவாங் என்ற வார்த்தைக்கு வீரர் என்ற பொருளை குறிப்பதாகும். கட்சியில் நடக்கும் அதர்மங்களை எதிர்த்து போராட்ட குணம் வேண்டும் என்பதால் அப்பெயரை வைத்தார். கட்சியின் உறுப்பினர்கள், பணத்திற்காகவும் பதவிக்காகவும், நம்பிக்கை துரோகம் செய்ததாக அவர் சாடினார். சமூக நலனைக் கண்டுகொள்ளாமல், ஊழலில் தோய்ந்த அரசியல் தலைவர்களால், மலாய்க்காரர்கள் நெடு நாட்களாகத் துன்பப்பட்டுவருவதாய் டாக்டர் மகாதீர் … Read more