இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்

0
205

லடாக் எல்லை பிரச்சினையால் இந்தியாவும் சீனாவும் தற்போது மோதலில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையின் காரணமாக சீன செயலிகளை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அதுபோலேவே நேபாளமும் இந்தியாவை அடிக்கடி சீண்டி வருகிறது. நேபாள பிரதமர்  ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார் என  சர்ச்சையான கருத்தை கூறிவந்தார். தற்போது சீனாவும் நேபாளமும்  ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என சீன கூறியுள்ளது. நேபாளத்துடன் சீனா நெருக்கம் காட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சரும் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளரும் காணொளி மூலம் பேசும்போது ஒன் பெல்ட் ஒன் ரோடு’ என்ற சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முக்கியமான விவகாரங்களில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்று கூறினர்.

Previous articleசிவகாசி வெடிஆலையில் வெடி விபத்து?
Next articleதனியாக ஒரு நாட்டையே உருவாக்கிய நித்யானந்தா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here