முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு!

0
103
The boy who went to the beauty salon to beautify his face was admitted to the hospital! Police registered a case!
The boy who went to the beauty salon to beautify his face was admitted to the hospital! Police registered a case!

முகத்தை அழகாக்க பியூட்டி சலூனிற்கு சென்ற சிறுவன் மருத்துவமனையில் அனுமதி! போலீசார் வழக்கு பதிவு!

கோவை மாவட்டம் ஆர் எஸ் புரத்தில் ராக் மென்ஸ் பியூட்டி சலூன் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பியூட்டி சலூனிற்கு தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். மேலும் அந்த சலூன்னிர்க்கு சம்பவத்தன்று 15 வயது சிறுவன் சென்றுள்ளான். அங்கு கொதிக்கும் நீராவியை கொண்டு சிறுவனின் முகத்தை சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது கொதிக்கும் நீராவியானது சிறுவனின் முகத்தில் பட்டது. அதில் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு அந்த சிறுவன் அலறி துடித்துள்ளான். அக்கம் பக்கத்தினர் அந்த சிறுவனை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு சிறுவனின் காயத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை விஜயகுமார் ஆர் எஸ் புரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அந்த பகுதியில்  சிறிது நேரத்திற்கு பெரும் பரபரப்பு நிலவி காணப்பட்டது.

author avatar
Parthipan K