காதலுக்கு இடையூறு செய்ததாக காதலன் கொடுத்த கொடூர  தண்டனை !! காதலியின் சகோதரனுக்கு  நேர்ந்த விபரீதம்!! 

0
157
The cruel punishment given by the lover for disturbing the love !! Tragedy happened to girlfriend's brother!!
The cruel punishment given by the lover for disturbing the love !! Tragedy happened to girlfriend's brother!!

காதலுக்கு இடையூறு செய்ததாக காதலன் கொடுத்த கொடூர  தண்டனை !! காதலியின் சகோதரனுக்கு  நேர்ந்த விபரீதம்!! 

காதலுக்கு இடையூறு செய்ததாக காதலியின் அண்ணனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தில் உள்ள புதுநகர் ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் மைக்கேல் விஜய் வயது 23. இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இந்த நிலையில் விஜய்யின் தங்கையை பெரும்பாக்கம் இந்திரா நகர் அருகில் உள்ள எத்திராஜ் தெருவை சேர்ந்த ராஜேஷ் வயது 26, என்பவர் காதலித்து வந்துள்ளார்.

ஆனால் ராஜேஷின் நடத்தை சரி இல்லை எனக் கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ராஜேஷ் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக விஜய் தனது தங்கையிடம் ராஜேஷ் பற்றிய உண்மைகளை கூறி ஆதாரங்களை காட்டியுள்ளார். இதன் காரணமாக விஜயின் தங்கை ராஜேஷ் உடனான பழக்கத்தை தவிர்த்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தனது காடு காதலுக்கு இடையூறாக இருந்த மைக்கேல் விஜய் பழிவாங்குவதற்கு திட்டம் தீட்டி அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த ஆறாம் தேதி மேடவாக்கம் கூட்டு ரோடு அருகே நின்று கொண்டிருந்த விஜயை, தனது நண்பர்களுடன் வந்த ராஜேஷ் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த விஜயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்பின் ராஜ், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடி மேடவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த ராஜேஷ், மற்றும் அவனது நண்பர்களான திருமுடிவாக்கம் எருமையூரைச் சேர்ந்த பாரத் வயது .24, விக்னேஷ் வயது.21, பெரும்பாக்கம், நேசமணி நகரை சேர்ந்த ஆகாஷ்  வயது 23 ஆகிய 4 பேரையும் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.