இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்!

0
104
#image_title

இந்த 4 வகை இலைகள் பைல்ஸ் புண்களை ஒரே நாளில் குணமாக்கும்!

தற்காலத்தில் நாம் மோசமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளவதில்லை. எளிதில் செரிக்கின்ற ஆரோக்கியமான உணவுகளை உண்பதில்லை. அதுமட்டும் இன்றி மலம் கழிக்க கூட நேரம் இல்லாமல் வேலை, பணம் என்று ஓடிக்கொண்டே இருப்தால் இளமை காலத்திலேயே பல நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம்.

குறிப்பாக பைல்ஸ் ஏற்பட்டால் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகி விடுவோம். பைல்ஸ்(மூலம்) ஏற்பட்டால் மலம் கழிப்பது மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவிடும். ஆசனவாயில் இரத்த கசிவு, ஆசனவாய் வீக்கம், புண்கள் என்று அடுக்கடுக்காக ஏற்படும் பாதிப்பால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவோம்.

மூலத்தில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று பல வகைகள் இருக்கிறது. இதில் எந்த வகை மூலமாக இருந்தாலும் சரி அதை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியை அவசியம் பின்பற்றவும்.

வெற்றிலை
வேப்பிலை
குப்பைமேனி
துத்தி கீரை

ஒரு கிண்ணத்தில் ஒரு வெற்றிலை, 1 கொத்து வேப்பிலை, சிறிது குப்பைமேனி மற்றும் துத்தி கீரையை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும். இந்த விழுதில் இருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இந்த நீரில் அரைத்த சாற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மூல நோய் புண்கள் முழுமையாக குணமாகும்.