இந்த ஒரு விதை போதும்!! எந்த நோயும் நம்மை நெருங்காது!!

0
48

இந்த ஒரு விதை போதும்!! எந்த நோயும் நம்மை நெருங்காது!!

நம் உடலுக்கு ஆரோக்கியம் தான் மிகவும் முக்கியம் என்று நினைப்பவர்கள் இந்த விதையை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் சூரியகாந்தி விதை. இந்த விதையால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இந்த விதையில் காப்பர், மெக்னீசியம், சிங்க் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லதாகும்.

எனவே இந்த சூரியகாந்தி விதையால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

1. சூரியகாந்தி விதையில் இருக்கக்கூடிய மெக்னீசியம் சத்தானது நம்முடைய எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதால் எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் ஏற்படாது.

2. சர்க்கரை நோயாளிகள் இந்த சூரியகாந்தி விதையை தினமும் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

3. மேலும் இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. எனவே செயற்கையான முறையில் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு மெக்னீசியம் நிறைந்துள்ள இந்த சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

4. இந்த சூரியகாந்தி விதை ஆனது இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது ஏனென்றால் இதில் மெக்னீசியம் ஜிங்க் மற்றும் ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது இதயம் சம்பந்தப்பட்ட அதாவது மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை உடனடியாக சரி செய்கிறது.

5. இந்த சூரியகாந்தி விதையில் இருக்கக்கூடிய பேட்டி ஆசிட் ஆனது ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை வளர்ச்சி அடைய செய்கிறது.

6. இதில் பைபர் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. எனவே இது உடல் எடையை குறைப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த சூரியகாந்தி விதையில் இருக்கக்கூடிய ஃபைபர் நமக்கு பசியை தூண்டாமல் நிறுத்தி வைக்கும். எனவே நாம் ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக அந்த நேரத்தில் இந்த சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வர உடல் எடை உடனடியாக குறையும்.

7. மேலும் இது நமக்கு ஏற்படக்கூடிய ஜீரண சம்பந்தமான பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

8. சில பேர் இரவு சரியாக தூக்கம் வராமல் அதற்காக மாத்திரைகளை உட்கொண்டு தூங்கி வருகிறார்கள். எனவே அதை தவிர்த்து விட்டு இந்த சூரியகாந்தி விதைகளை தினமும் சாப்பிட்டு வர அதில் இருக்கக்கூடிய ட்ரைட்டோ ஃபார்ம் என்ற சத்தானது நமக்கு தூக்கமின்மையை சரி செய்து இரவு நேரம் நல்ல தூக்கத்தை அளிக்கும்.

9. மேலும் இந்த விதையை தினமும் எடுத்துக் கொண்டால் சளி இருமல் காய்ச்சல் போன்ற எந்த நோயும் நெருங்காமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

10. மேலும் இந்த சூரியகாந்தி விதையில் ஆன்ட்டி ஸ்ட்ரெஸ் குணங்கள் அதிகமாக இருப்பதால் இது நமக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தம் உடல் சோர்வு உடல் பலவீனம் என அனைத்தையும் சரி செய்கிறது.

11. மேலும் மிக முக்கியமான ஒன்று என்னவென்றால் இது நம் உடம்பில் எந்த பகுதியிலும் ஏற்படக்கூடிய கேன்சரை அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது.

12. நம் உடலில் ஏற்படக்கூடிய அனைத்து வழி மற்றும் வீக்கங்களையும் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் சூரியகாந்தி விதை சாப்பிடுவதன் மூலமாக குணப்படுத்தலாம்.

13. மேலும் இந்த சூரியகாந்தி விதையை சாப்பிடுவதனால் கை கால் வலி, இடுப்பு வலி முதுகு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என ஏராளமான பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஒரே ஒரு விதை தீர்வாக உள்ளது.

இந்த சூரியகாந்தி விதைகளை பச்சையாகவும் சாப்பிட்டு வரலாம் அல்லது மாலை நேரங்களில் சிறிதளவு வறுத்து ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிட்டு வரலாம். மேலும் சாலட் மற்றும் சூப்பில் கூட இதை கலந்து சாப்பிட்டு வரலாம்.

author avatar
CineDesk