மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

0
124

மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!

நம் உடலில் இதயம் கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் எவ்வளவு முக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மூன்று உறுப்புகளையும் நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இந்த பதிவில் இதயம் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய ஒரு வீட்டு வைத்தியத்தை பார்ப்போம். இந்த ஒரே மருத்துவம் மூன்று உறுப்புகளிலும் இருக்கக்கூடிய கழிவுகளை சுத்தம் செய்து வெளியே அனுப்பும்.

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் நுரையீரல் தொற்றுகள் என அனைத்தையும் சரி செய்யக்கூடிய சக்தி வாய்ந்தது. எனவே வெறும் மூன்று பொருட்களை வைத்து வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு மருத்துவ குறிப்பை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சை
இஞ்சி
பூண்டு

செய்முறை:
1. ஒரு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 400 மில்லி அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

3. இந்த தண்ணீரில் நறுக்கி வைத்திருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை சேர்க்கவும்.

4. பிறகு இதனுடன் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

5. அடுத்து ஒரு மூன்று பல்லு பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. இவ்வாறு அனைத்தையும் சேர்த்து விட்டு 400 மில்லி தண்ணீர் 200 ml தண்ணீராக வரும் வரை 7 லிருந்து 10 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.

7. பிறகு அடுப்பை ஆப் செய்து விட்டு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இது நன்கு ஆரிய பிறகு இதை குடிக்கலாம். இவ்வாறு செய்த இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றிலும் மாலை நான்கிலிருந்து ஐந்து மணி அளவில் குடிக்க வேண்டும். எனவே ஒரு நாளைக்கு இரு வேலைகள் இதை குடிக்க வேண்டும்.

உங்களுக்கு இதில் சுவை தேவைப்பட்டால் சிறிதளவு தேனை கலந்து குடிக்கலாம். இவ்வாறு இதை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து குடித்து வர இதயத்தில் இருக்கக்கூடிய அனைத்து அடைப்புகளும் நீங்கும்.மேலும் இதய பலவீனம் இதய படபடப்பு பதற்றம் இதயம் அதிக அளவில் துடிப்பது என அனைத்து பிரச்சனைகளையும் இதை குடிப்பதால் உடனடியாக சரியாகும்.

அதேபோல கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான கல்லீரல் கொழுப்பு பித்த நோய்கள் கல்லீரல் சூடு என கல்லீரல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சினை இருப்பவர்களும் இதைத் தொடர்ந்து குடித்து வர உடனடியாக குணமாகிவிடும். புகையிலை மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தி கல்லீரல் பழுதடைந்து விட்டால் கூட இந்த பானத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வர பிரச்சனை சரியாகும்.

மேலும் நுரையீரலில் இருக்கக்கூடிய சளியை வெளியேற்றி சுவாசத்தை எளிதாக்குவது மற்றும் புகைபிடித்தல் போன்ற பிரச்சினையினால் நுரையீரல் பழுதடைந்து விட்டால் இந்த பானத்தை குடித்து வர நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக குணமாகும்.

 

author avatar
CineDesk