சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!

0
110

சிறுநீரகத் தொற்று அரிப்பு அனைத்தையும் சில நிமிடங்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மருத்துவம்!!

ஆண்கள் பெண்கள் இரு பாலருக்குமே இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் சிறுநீரக தொற்று சிறுநீரக அரிப்பு சிறுநீரக புண் போன்றவை. இந்த நோய் பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கிறது. குழந்தைகள் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வருவதால் அங்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு அதனால் அரிப்பு ஏற்படுகிறது.

அசுத்தமான இடங்கள் மற்றும் அசுத்தமான உடைகள் போன்றவற்றாலும் கூட இந்த சிறுநீரக தொற்று பிரச்சனை ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் பருக வேண்டும். சிறுநீரை வெகு நேரத்திற்கு அடக்கி வைக்கக் கூடாது ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்பும் அந்த இடத்தை கழுவி விட வேண்டும்.பெரும்பாலும் இந்த நோயால் ஆண்களை விட பெண்களே கஷ்டப்படுகிறார்கள்.

சிறுநீரகத் தொற்று ஏற்படுவதற்கான காரணங்கள்:

1. சிறுநீர் மூலமாக கழிவுகள் வெளியேறவில்லை எனில் சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.

2. சிறுநீரகப் பையில் பாதிப்பு இருந்தாலும் சிறுநீரகத் தொற்று ஏற்படுகிறது.

3. சர்க்கரை வியாதி இருப்பவர்களையும் இந்த சிறுநீரக தொற்று வெகுவாக தாக்குகிறது.

எனவே இது போன்ற சிறுநீரக பாதையை சுற்றி ஏற்படும் அரிப்பு எரிச்சல் தொற்றுகள் என அனைத்தையும் சுலபமாக சரி செய்யக்கூடிய ஒரு மருத்துவ குறிப்பை இங்கு பார்ப்போம்.

செய்முறை:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய திரிபலா சூரணம் பொடியை வாங்கிக் கொள்ளவும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை சிறுநீரக பாதையில் அரிப்பு புன் மற்றும் தொற்று இருக்கக்கூடிய இடத்தில் கழுவி வரவும்.

இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தோற்று இருக்கக்கூடிய இடத்தில் கழுவி வரவும். இவ்வாறு இதை ஒரு நாள் மட்டும் செய்தாலே போதும். சிறுநீரகப் பாதையில் இருக்கக்கூடிய தொற்றுகள் அரிப்பு, புண்கள் என அனைத்தும் உடனடியாக சரியாகும்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு செயற்கையான முறையில் கிரீம்களையும் மருந்துகளையும் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இதுபோல இயற்கையான முறையில் வீட்டிலேயே செய்து பயன்படுத்துவதால் ஒரே நாளிலேயே அனைத்து விதமான பிரச்சினைகளும் சரியாகிறது. மேலும் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளோ ஏற்படாது.

அடுத்து சிறுநீரகப் பாதை மற்றும் சிறுநீரகப் பையில் இருக்கக்கூடிய கிருமிகளை எவ்வாறு அழிப்பது என்பதற்காக ஒரு மருத்துவ குறிப்பை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தாமரை பூ பொடி 50 கிராம்
சிறுகண்பீளை பொடி 50 கிராம்
இந்த இரண்டும் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் சுலபமாக கிடைக்கும்.

செய்முறை:
1. இந்த இரண்டு பொடியையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் சேமித்துக் கொள்ளவும்.

2. இரண்டு பொடியையும் கலந்து வைத்திருக்கக்கூடிய கொடியிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.

3. இதனுடன் 200 மில்லி அளவு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைக்கவும்.

4. பிறகு இதை ஆற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இவ்வாறு தயாரித்த இதை காலையும் மாலையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். இதை 15 நாட்களுக்கு தொடர்ந்து குடித்தாலே போதும் சிறுநீரகப் பாதை மற்றும் சிறுநீரக பையில் இருக்கக்கூடிய கிருமிகளை வேரோடு அழிக்கும் சக்தி வாய்ந்தது. இந்த கசாயமானது சிறுநீரை நன்கு சுத்திகரித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.