குடலில் அடைபட்டு கிடக்கும் மலம் முழுவதையும் நிமிடத்தில் வெளியேற்ற 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
32
#image_title

குடலில் அடைபட்டு கிடக்கும் மலம் முழுவதையும் நிமிடத்தில் வெளியேற்ற 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்துங்கள்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது. தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*எளிதில் செரிமானம் ஆகாத உணவு

*மன அழுத்தம்

*தேவையான நீர் பருகாமல் இருத்தல்

*நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு

*உடல் சோர்வு

*உடல் நலக் கோளாறு

மலச்சிக்கல் பாதிப்பு நீங்க வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

1)விளக்கு எண்ணெய்

2)பெருஞ்சீரகம்

3)கல் உப்பு அல்லது இந்துப்பு

4)எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். பிறகு 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சுத்தமான விளக்கு எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

அதன் பிறகு சிறிதளவு கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து கலக்கவும். அதனோடு எலுமிச்சை சாறு 10 முதல் 15 சொட்டுகள் விட்டு அவற்றை குடிக்கவும். இவ்வாறு செய்தால் அடுத்த சில நிமிடங்களில் மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.