உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!!

0
143
#image_title

உங்கள் முடி புதர் போல் வளர இந்த எண்ணெயை தலைக்கு யூஸ் பண்ணுங்கள்!!

தற்பொழுது இளம் வயதில் முடி உதிர்தல் பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இளம் வயதில் வழுக்கை,முடி கொட்டல் பிரச்சனை ஏற்பட்டால் விரைவில் வயதான தோற்றத்தை அடைந்து விடுவோம்.எனவே இந்த பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு காண இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)நெல்லிக்காய்
3)கறிவேப்பிலை
4)வேப்பிலை
5)வேப்பம் பூ

செய்முறை:-

10 பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு கப் அளவு கறிவேப்பிலை,ஒரு கப் வேப்பிலை மற்றும் 1/4 கப் வேப்பம் பூவை நீரில் போட்டு அலசி வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நறுக்கிய பெரு நெல்லிக்கையையும் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் காய வாய்த்த பொருட்களை போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பொடியை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடங்களுக்கு காய்ச்சி எடுக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயை நன்கு ஆற விடவும்.இதை ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தல்,பேன் தொல்லை,பொடுகு தொல்லை முழுமையாக அகலும்.