100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

0
185
#image_title

100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

உடலில் நோய் இல்லாமல் வாழ்வது என்பது அதிசயம்.காரணம் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மோசமான ஒன்றாக மாறிவிட்டது.

ஆரோக்கியமற்ற உணவால் உடலில் வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,இரத்த சோகை,மூட்டு வலி,முழங்கால் வலி,இதய நோய்,கேன்சர் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில இயற்கை வழிகளை தவறாமல் பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)சீந்தில் பட்டை
2)கருப்பு மிளகு
3)மஞ்சள் தூள்

சீந்தில் பட்டை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் சீந்தில் பட்டை,கருப்பு மிளகு 25 கிராம் மற்றும் ஒரு துண்டு மஞ்சள் சேர்க்கவும்.மஞ்சள் கிழங்கு இல்லாதவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.

இந்த மூன்று பொருட்களையும் நன்கு அரைத்து பொடியாக்கி ஆறவிடவும்.பின்னர் ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த சீந்தில் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடிக்கவும்.சர்க்கரை நோய் இருப்பவர்கள் இனிப்பு எதுவும் சேர்க்காமல் பருக வேண்டும்.