தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 5 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

0
32
#image_title

தீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 5 நிமிடத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்..!!

நம்மில் பெரும்பாலானோருக்கு நெஞ்சு சளி தீராத பிரச்சனையாக இருக்கிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும்.

நெஞ்சு சளி அறிகுறி:-

தொண்டை வலி, தொண்டை புண், நீஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு
மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு இருமல், உடல் சோர்வு.

இந்த நெஞ்சு சளி பாதிப்பை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் குணமாக்கிவிட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*சீரகம்

*நெல்லி

*தேன்

*மிளகு

செய்முறை:-

ஒரு உரலில் 1/4 தேக்கரண்டி சீரகம், 4 மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும். இதை ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். அடுத்து 1 பெரு நெல்லியை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் இடித்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத் தூளை அதில் சேர்த்து கலந்து விடவும். பின்னர் தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து பருகவும். இவ்வாறு செய்து பருகினால் நாள்பட்ட நெஞ்சு சளி முழுமையாக கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.