வந்துவிட்டது கொரோனாவின் அடுத்து திரிபு! ஒமைக்ரானை விட வேகமாக பரவுகிறதா?

வந்துவிட்டது கொரோனாவின் அடுத்து திரிபு! ஒமைக்ரானை விட வேகமாக பரவுகிறதா?

கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தினம் 2 லட்சத்துக்கு அதிகமான தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸின் அடுத்த மாறுபாடு மிகவும் வேகமாக பரவும் என குறிப்பிடுகிறது. கொரோனாவின் ஒமைக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைவான ஆபத்தானது என்றாலும், இதுவரை இல்லாத வகையில் மிகவும் வேகமாக பரவும் தொற்று நோயாக கூறப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் covid-19 தொடர்பான ஆய்வு … Read more

மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மார்ச் மாதம் முதல், அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு. தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதித்தனர் மேலும், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது … Read more

பிரிட்டன் செல்வோருக்கு அரிய வாய்ப்பு -அரசு சூப்பர் அறிவிப்பு!

பிரிட்டன் செல்வோருக்கு அரிய வாய்ப்பு -அரசு சூப்பர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திய, வெளிநாட்டு பயணிகள் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய, நாடான பிரிட்டனில் கரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இதில் அடுத்த மாதம் 11ம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையாக, கரோனா தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு பயணியர் பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் எவ்வித பரிசோதனையும் … Read more

விமானத்தின் டயர் பகுதியில் 11 மணிநேரம் பயணித்த நபர்; உயிர் தப்பிய அதிசயம்!

விமானத்தின் டயர் பகுதியில் 11 மணிநேரம் பயணித்த நபர்; உயிர் தப்பிய அதிசயம்!

விமானத்தில் முறையாக பயணம் செய்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும், விமானத்தின் டயர் பகுதியில் மிகச்சிறிய இடத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரிதாக நடந்துள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. விமான நிலையத்தின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையிலும், பலர் துணிந்து விமானத்தின் அடிப்பாகத்தில் ஒளிந்து கொள்கின்றனர். இதுகுறித்து விமான ஊழியர்கள், முதலில் எகிறி குதித்து விமானத்தின் டயர் மீது ஏறிவிட்டால், அதன் பின் டயர் மடங்கும் பகுதியில் சுலபமாக ஒளிந்து கொள்ளலாம் என கூறுகின்றனர். ஆனால்,அவ்வாறு பயணிப்பது … Read more

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன? உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முறை செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு வருவதற்கு  சுமார் மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை ஆகிறது. எனவே பரிசோதனைகளை விரைவாக செய்து அதற்கான முடிவுகள் உடனே கிடைப்பதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் … Read more

உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

உக்ரைன் நெருக்கடி; ரஷ்யா தாக்கினால் புதின் மீது பொருளாதார தடை விதிக்கலாம்- ஜோ பிடன்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா ஆலோசிக்கும் என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயல்பாடு, உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார். அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து … Read more

அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

அவசர வீடியோ கால் செய்த ஜோ பிடன். தாக்க ரெடியான ரஷ்யா!

உக்ரைன் எல்லையில், ரஷ்யா தொடர்ந்து தனது படைகளை குவித்து வருவதால் போர் ஏற்படும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார். அமெரிக்க படைகள் அனைத்தும் எந்த நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் உக்ரைன் எல்லையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி கூடுதலாக 8500 படைகளை தயார் நிலையில் … Read more

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!

தாலிபான்கள், பல போராட்டங்களுக்கு பின்பு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். கைப்பற்றிய நாளில் இருந்து அந்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். ஒருபக்கம் மக்களுக்கான சுதந்திரம் பெரும் கேள்வியாக இருந்தாலும், தற்போது வாழ்வாதாரம் கூட பெரும் பிரச்சனையாக உருவாகி உள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நாளிலிருந்து அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வருத்தம் … Read more

தென்சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென்சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பசிபிக் கடல் பகுதிகளில் சீனா பல ஆக்கிரமிப்புகளை செய்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக அமெரிக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானமான யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் என்ற விமானம், தாங்கி போர்க் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. கப்பல் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில் F35 C … Read more

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு ;42 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு ;42 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான பனிப் பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் காயமடைந்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள 15 மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் இந்த கடுமையான பனிப் பொழிவின் காரணமாக, ஏராளமான வீடுகள் இடிந்து உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. பனிப் பொழிவின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதற்காக அவர்கள் கடுமையாக போராடி வருவதாக பேரிடர் மேலாண்மை அமைச்சகம் … Read more