இரண்டு கோடியை நெருங்கி வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

இரண்டு கோடியை நெருங்கி வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512  பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் … Read more

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

தென் அமெரிக்காவில் அரங்கேறிய வினோதமான சம்பவம்

தென் அமெரிக்க நாடான பெருவில் கிருமித்தொற்றுக்கான கட்டுப்பாடுகளை மீறிய 8 கோமாளிகளைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். அந்த 8 பேரும் ஒரே தொழிலில் ஈடுபடும் சக கலைஞரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுள்ளனர். இறந்தவரை வழியனுப்பி வைக்கும்வண்ணம் அவர்கள் இறுதிச் சடங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தென்னமெரிக்காவில் அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் வரம்பை மீறி நடந்துகொண்டதற்காக அந்த 8 கோமாளிகளையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

பாகிஸ்தானிலும் தடை செய்ய இருக்கும் செயலிகள்

‘ஒழுக்கமற்றவை’ என்று வகைப்படுத்தியுள்ள ஐந்து செயலிகளைப் பாகிஸ்தான் தடைசெய்துள்ளது. Tinder, Grindr, SayHi, Tagged, Skout போன்ற சமூக ஊடகத் தளங்கள் பாகிஸ்தானியச் சட்டத்திற்கு உகந்தவகையில் தளங்களை நிர்வகிக்கத் தவறியதாய்க் கூறப்பட்டது. ஆனால் பெரியவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அந்தச் செயலிகளைப் பயன்படுத்த விரும்பினால், அவற்றுக்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்கு உரிமை இல்லை என்று மின்னிலக்க உரிமைக்குழு குரல் எழுப்பியுள்ளது. செயலிகளைத் தடைசெய்தாலும் அவற்றைப் பயன்படுத்த மக்கள் மாற்றுவழிகளைக் கண்டறிவர் என்றார் Bytes For All உரிமை அமைப்பின் இயக்குநர். … Read more

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு!

ஜெய் பப்ஜி ! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசு! பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. கடந்த ஒரு மாத காலமாக இந்தியா சீனா நாடுகளுக்கிடையே போர் நடந்து கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த மாதம் இந்திய-சீன நாடுகளுக்கிடையே போர் மூண்டதால் இந்திய வீரர்களை சீன வீரர்கள் தாக்கி இந்திய வீரர்கள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்திய அரசு சீன அரசுடன் … Read more

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?

ஆஸ்திரேலியாவில் ஒரே ஆண்டில் இத்தனை முதலைகள் பிடிபட்டதா?

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் 14.4 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது. பிடிபட்ட முதலை, முதலைப் பண்ணைக்கு அனுப்பப்படும். அங்கு இனப்பெருக்கத்திற்கு அதன் பங்கை அளிக்கும். கடல்வாழ் முதலை, முதலை வகைகளிலேயே ஆகப் பெரியது. ஆண் முதலைகள் 7 மீட்டர் நீளம் வரை வளரலாம், 997.9 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கலாம். அவை கரையோரங்களில் வாழும். தற்போது, ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தில் சுமார் 100,000 கடல்வாழ் முதலைகள் இருப்பாதாக அரசாங்கம் தகவல் அளித்துள்ளது. இந்த ஆண்டு, மொத்தம் 167 … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த கண்ணில்படுபவர்களை சுட உத்தரவா?

கொரோனாவை கட்டுப்படுத்த கண்ணில்படுபவர்களை சுட உத்தரவா?

வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்திற்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல நாட்டின் ராணுவத்தினர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்றதற்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என … Read more

ஆயத்துல்லா காமேனிக்கு   பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர்

ஆயத்துல்லா காமேனிக்கு   பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனிக்கு   பதிலடி கொடுத்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் பாம்பியோ நீங்கள் காட்டிக்கொடுப்பவர்களைத் தேடுகிறீர்களானால், சீனா உய்குர்களை அழிக்க முற்படுகிறது. அந்த முஸ்லிம்களுக்கு சி.சி.பி.யின் கொடூரமான சிகிச்சைக்காக உங்கள் பொது அழைப்பை எதிர்பார்க்கிறேன். காமேனியின் வெறுப்பு சித்தாந்தத்தை உலகம் நிராகரிக்க வேண்டும், கண்டிக்க வேண்டும். ஆபிரகாமின் பிள்ளைகள் – முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் – சமாதான எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியடைகிறார்கள், அதே நேரத்தில் காமேனி மேலும் வன்முறைக்கு அழைப்பு விடுக்கிறார். ஐக்கிய அரபு … Read more

மிகவும் ஆபத்தானவர்களை விடுதலை செய்ய போகிறதா ஆப்கானிஸ்தான்

மிகவும் ஆபத்தானவர்களை விடுதலை செய்ய போகிறதா ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர,அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4,600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த் ஒப்பந்தத்தின் பேரில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்த பயங்கரவாதிகள் விடுதலைக்கு ஆப்கானிஸ்தான் … Read more

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காகப் பெருக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அணு ஆயுதங்களைப் பெருக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சீனா முதன்மையான பகுதிகளில் தனது படை வலிமையை அமெரிக்காவுக்குச் சமமாகவோ, அதைவிட அதிகமாகவோ பெருக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சீன இராணுவம் தனது 200-க்கும் மேற்பட்ட அணு ஆயுதக் களஞ்சியத்தை 10 ஆண்டுகளில் விரிவுபடுத்தவும், அணுசக்தி … Read more

அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வகை காவலாளி

அமீரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வகை காவலாளி

அமீரகத்தில் பிரமாண்டமான வணிக வளாகம் ஒன்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ரோபோ’ காவலாளி. பொதுவாக வணிக வளாகங்களில் ‘செக்கியூரிட்டி கார்டு’ எனப்படும் காவலாளிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் இதர பணிகளை செய்து வருகின்றனர். அந்த பணிகள் அனைத்தையும் செய்யும் வகையில் தற்போது ‘ரோபோ’ காவலாளி பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 4 சக்கரங்களுடன் வணிக வளாகத்தை சுற்றி வரும் இந்த ‘ரோபோ’ காவலாளி பொதுமக்கள் நடமாட்டத்தை மிக நுட்பமாக கண்காணிக்கிறது. யாராவது முக கவசம் அணியவில்லை என்றால் கண்டுபிடித்து விடுகிறது. யாராவது … Read more