சைனஸ், ஆஸ்துமா, நெஞ்சு சளி குணமாக வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிடவும்!

0
206
#image_title

சைனஸ், ஆஸ்துமா, நெஞ்சு சளி குணமாக வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிடவும்!

இன்றைய உலகில் பலர் சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகினறனர். நுரையீலிலில் தொற்று கிருமிகள் தேங்கி இருத்தல், அதிகப்படியான சளி கோர்த்தல் உள்ளிட்ட பாதிப்புகளால் இது போன்ற நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு இயற்கை வைத்தியத்தில் தீர்வு இருக்கின்றது.

*வெற்றிலை
*கிராம்பு
*ஏலக்காய்
*மிளகு
*வெல்லம்

ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பு மற்றும் தண்டு பகுதியை நீக்கி கொள்ளவும். பிறகு அதில் 1 கிராம்பு (இலவங்கம்), 1 ஏலக்காய், 3 கருப்பு மிளகு மற்றும் 1 துண்டு வெல்லம் வைத்து மடக்கி சாப்பிடவும். இவ்வாறு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி கரைந்து வெளியேறி விடும்.

அதுமட்டும் இன்றி ஆஸ்துமா, சைனஸ், மூக்கடைப்பு உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் விரைவில் குணமாகும்.

*வெற்றிலை

வெற்றிலை பல நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டிருக்கின்றது. வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு, இருமல், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

*இலவங்கம்

நுரையீரலில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும். தொண்டை, நுரையீரலில் உள்ள தொற்று கிருமிகளை அகற்ற உதவுகிறது.

*ஏலக்காய்

சுவாசம் தொடர்பான பாதிப்பு, வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

*மிளகு

நுரையீரலில் உள்ள கிருமிகளை அகற்ற உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.