நெஞ்சு சளி பிரச்சனை 5 நிமிடத்தில் தீர “கொள்ளு ரசம்” இப்படி செய்து குடிங்க!! 100% தீர்வு கிடைக்கும்!!

0
59
#image_title

நெஞ்சு சளி பிரச்சனை 5 நிமிடத்தில் தீர “கொள்ளு ரசம்” இப்படி செய்து குடிங்க!! 100% தீர்வு கிடைக்கும்!!

நம்மை எளிதில் பாதித்து விடும் சளி தொல்லையில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள கொள்ளு ரச செய்முறையை பின்பற்றி நல்ல பலனை பெறுங்கள்.சளியை விரட்டுவதில் கொள்ளு சிறந்த பொருளாக இருக்கிறது.அதோடு சீரகம்,மஞ்சள் தூள் சேர்த்து ரசம் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொள்ளு பருப்பு – 100 கிராம்

*சீரகம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி இலை – சிறிதளவு

*பூண்டு – 5 பற்கள்

*தக்காளி – 1

*புளி – சிறு துண்டு

*உப்பு – தேவையான அளவு

*மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

*நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுந்து பருப்பு – 1/4 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 100 கிராம் கொள்ளு பருப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் இதை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து கொள்ளு பருப்பை சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைத்து அதை நன்கு ஆற விடவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஆறவைத்துள்ள கொள்ளு பருப்பை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.பிறகு 1 தக்காளி,5 பல் பூண்டு,1 தேக்கரண்டி சீரகம்,1 கொத்து கருவேப்பிலை,1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.அதில் ஊறவைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொள்ளவும்.பின்னர் அதில் 3 டம்ளர் தண்ணீர்,தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1/2 தேக்கரண்டி கடுகு,1/4 தேக்கரண்டி உளுந்து பருப்பு,2 வர மிளகாய்,1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள கொள்ளு கலவையை கடாயில் ஊற்றி கொதிக்க வைக்கவும். இவை நன்கு நுரைத்து வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் வாசனைக்காக சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொள்ளவும்.