12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

Photo of author

By Gayathri

12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

Gayathri

Attention 12 students!! Tamil Nadu government invites for labor management course!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் சென்னை அம்பத்தூரில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு அதோடு கூடவே முதுநிலை பட்டய படிப்புகளில் சேர நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகள் :-

✓ BA & MA தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பற்றிய படிப்பு மாலை நேர பட்டய படிப்புகளாக எடுக்கப்படுகிறது

✓ தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் வார இறுதி பட்டய படிப்புகளும் எடுக்கப்படுகிறது

✓ சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட BA & MA தொழிலாளர் மேலாண்மை வகுப்புகளோடு தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்ற PG TLA & TLL போன்ற பட்டப்படிப்புகளும் எடுக்கப்படுகிறது.

இந்தக் கல்வி நிலையத்தில் படித்த மாணவர்கள் தற்பொழுது பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக வேலை பார்த்து வருவது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இந்த பாடப்பிரிவுகளில் சேர நினைக்கக்கூடிய 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி ஏ தொழிலாளர் மேலாண்மை பாடப்பிரிவில் சேரலாம் என்றும் விண்ணப்பங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் அரசு விதிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அதனுடன் தங்கும் விடுதி வசதி இளநிலை மற்றும் உதுநிலை பயிலும் ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் தேதி :-

ஏப்ரல் 21 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட இருப்பதாகவும் அதனை பூர்த்தி செய்த மே 18ஆம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் என்றும் விண்ணப்ப கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும் எஸ்சி எஸ்டி மாணவர்கள் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் மட்டுமே போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The director,
Tamil Nadu institute of labour studies,
Chennai.

என்ற பெயரில் பதிவு தபால் எடுத்த வங்கி வரைவோலையினை 50 ரூபாய் தபால் கட்டணமாக செலுத்தி பெற்று விரைவு அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின்படி மாணவர்களின் சேர்க்கையானது நடைபெறும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.