பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

Photo of author

By Madhu

பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்.. எம்பி பதவியை தட்டி செல்லும் கமல்!!

Madhu

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாமக என பல்வேறு கட்சிகள் உள்ள நிலையில் முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமக இருந்து வந்தது அதன் பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக ஆறு மாநிலங்களவை எம்பி பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் தற்போது பாமக இல்லாத காரணத்தால் மீண்டும் அன்புமணிக்கு பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக மாநிலங்களவை எம்பிகளாக அன்புமணி, வைகோ, பி வில்சன், எம் சண்முகம், எம் முகமது அப்துல்லா, என் சந்திரசேகரன் ஆகிய ஆறு பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் அன்புமணி மற்றும் என் சந்திரசேகரன் ஆகியோர் கடந்த முறை அதிமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். மற்ற நான்கு பேரும் திமுக சார்பாக தேர்வு செய்யப்பட்டனர். ஒரு மாநிலங்களவை எம்பிக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அந்த அடிப்படையில் திமுகவுக்கு 4 மற்றும் அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைக்கும்.

இந்நிலையில் திமுக சார்பாக தற்போது எம்பி யாக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூத்த வழக்கறிஞர் சி வில்சன் ஆகியோர் மீண்டும் தேர்வாக இருக்கும் நிலையில் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முகமது அப்துல்லா தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது, நான்காவது எம்பியாக சண்முகத்துக்கு பதில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு கமலஹாசன் தோல்வியை சந்தித்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. அதனால் முன்னதாக செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் திமுகவில் ஒரு எம்பி பதவி கமலுக்கு வழங்கப்படும் என திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

அதிமுக சார்பாக இரண்டு எம்பிகளில் ஒருவர் அன்புமணி தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இல்லாததால், பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் நிலவி வருகின்றது. அன்புமணியின் எம்பி பதவிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதனால் இரண்டு இடங்களையும் அதிமுக சார்பாக உள்ள உறுப்பினர்களை நிரப்ப முடியும் அந்த பதவிகளை பிடிக்கப் போவது யார் என கட்சியின் மத்தியில் மிகப் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தென் தமிழகத்தில் இருந்து ஒருவருக்கும் வட தமிழகத்திலிருந்து ஒருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ராஜ் சத்யன், நடிகை விந்தியா ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகின்றது. மேலும் பதவி காலம் நிறைவடையும் சந்திரசேகர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதினால் ஆதிதிராவிடர் ஒருவருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் வட மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிக்காக கடுமையாக உழைத்து வரும் அவருக்கு கொடுக்கலாமா அல்லது பாஜகவுடன் கூட்டணி வைத்த நிலையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாமா என பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.