நகையை அடமான வெச்சிட்டு திரும்ப வாங்கலையா.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் உடனே டிரை பண்ணுங்க!

Photo of author

By Madhu

நகையை அடமான வெச்சிட்டு திரும்ப வாங்கலையா.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் உடனே டிரை பண்ணுங்க!

Madhu

நகை என்பது ஒரு சொத்தாக பார்க்கப்படும் நிலையில் பணத்தேவையின் பொழுது நகையை வங்கிகளில் அடமானம் வைத்து பண தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. நகையை அடகு வைக்கும் பொழுது அதனை சரியான காலகட்டத்தில் திருப்ப வேண்டும்.

ஆனால் மீண்டும் மீண்டும் மறு அடகு வைத்தால் வட்டியாக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரங்களை கட்ட வேண்டிய சூழல் உள்ளது. சிலர் நகையை திருப்ப செல்லும் பொழுது நகையை வங்கிகள் ஏலமே விட்டிருக்கும். நகை அடகு வைக்கும் பொழுது வங்கி கொடுக்கும் ரசீதியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த ரசீது இருந்தால் மட்டுமே நகையை திரும்ப பெற முடியும். நகை வைக்கும் பொழுது கொடுக்கப்படும் ரசீது தொலைந்து விட்டால் நகையை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆனால் அதனை காரணம் காட்டி வங்கி நிர்வாகம் தங்களது நகையை ஏலம் விடும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து தற்போதைய சந்தை நிலவரப்படி நகையின் மதிப்பீட்டிற்கு ஏற்ற பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் நகை அடமானம் வைக்க தற்போது புதுப்புது நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. முன்பே 100 சதவீதம் நகைக்கு 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 85 சதவீதம் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.