அரசு ஊழியர்களுக்காக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இன்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணம் இன்றி வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இலவச திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கூடியவர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு சட்டசபையில் முன்கூட்டியே அறிவித்தார்.
அதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. விவசாயிகளுக்கு 50,000 மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகப்பேறு விடுப்பு முடிவடைந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 209 பெண் காவலர்களுக்கு தங்கள் பேறுகால விடுபிற்கு பிறகு குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு மற்ற மாநகரம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பி இருந்தால் அந்த பணியிடமாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.