கொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!

Photo of author

By Madhu

கொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!

Madhu

கொரோனா பரவல் தாக்கம் உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. உயிர் இழப்புகளின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிய நிலையில் பலரும் பாதிப்படைந்தனர். அதனால் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. நோய் தாக்கம் அதிகரித்ததால் மீண்டும் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கையை கையெடுத்தனர்.

மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்த நிலையில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி கொண்டுவரப்பட்டு படிப்படியாக கொரோனா பரவல் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. ஆனால் தமிழக சுகாதாரத் துறை சார்பாக கூறுகையில் கொரோனா பரவல் வந்தாலும் வீரியமற்ற கொரோனா என்பதால் பயப்பட வேண்டாம் எனவும் முககவசம் அணிவது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழக முழுவதும் ஊரடங்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் என இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்த செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும் நெடிஷன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் அளித்த விளக்கத்தில் இணையத்தில் வைரலாக கூடிய போட்டோ கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட செய்தியை தற்போது வெளியிடுவது போல பரப்பி வருவதாககொரோனா பரவல் எதிரொலி.. ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு? தமிழக அரசு அளித்த விளக்கம்!வும் தெரிவித்துள்ளனர்.