நடிகை ராஸ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகின்ற நிலையில் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் நிலவி வருகின்றது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வெளியேறி ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அதனால் இவர்களுக்கு இடையே காதல் இருப்பதை ரசிகர்கள் தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருவரும் தங்களுடைய காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் இருவரும் சமூக வலைதளங்களில் பரிமாறிக் கொள்ளும் கருத்துகளும், பொது இடங்களில் ஒன்றாக இருபதும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகின்றது
கடந்த ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான சுற்றுலா இடங்களுக்கும் விஜய் தேவரகொண்டா வீட்டிற்கு ராஷ்மிகா செல்வது மற்றும் இன்ஸ்டாகிராமில் அதனை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அண்மையில் ராஷ்மிகாவின் பதிவில் எனக்கு பிடித்தவை அனைத்தும் இந்த படங்களில் உள்ளன இடம், சேலை கொடுத்த அன்பான பெண், புகைப்படக்காரர் என்று பதிவு செய்திருந்தார்.
அந்த புகைப்படங்களை தேவரகொண்டா எடுத்தார் என்றும் சேலையை அவரின் தாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ராஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்ட இருவரும் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில் ராஷ்மிகா தேவரகொண்டா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.