திமுக தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் திமுக வெற்றி பெற்றவுடன் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றது. அதில் அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை சார்பாக மக்களுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்டங்களை செய்வதில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றது.
சென்னை பெரியார் அரசு மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் பெரியார் நகரில் முக்கிய மருத்துவ பிரிவுகளுடன் ஆறு தளங்களில் சுமார் 560 படுக்கைகளுடன் பெரிய மருத்துவமனையை உருவாக்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு ஜூன் 15ஆம் தேதி திறந்து வைத்துள்ளார். 240 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் படுகைகள் மற்றும் 15 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் செயல்பட தொடங்கி இருக்கின்றது.
மேலும் இந்த மருத்துவமனைகளின் மூலம் லட்சக்கணக்கான புறநானிகளும் உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர். அதுபோலவே சென்னை ஓமந்தூர் அரசு உயர்தரப்பு மருத்துவமனை மேம்பாடு செய்யப்பட்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, புற்று நோயை அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நெஞ்சு அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது போலவே பல்வேறு மருத்துவ உதவிகளை திமுக ஆட்சி செய்து வரும் நிலையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவன திட்டத்தின் மூலமாக கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, சென்னை, கீழ்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களில் ஆறு புதிய மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலவச மருந்தகமும் ஒவ்வொரு பகுதிகளும் திறந்து வைத்து பயன்பாட்டில் இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திமுக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் இதைவிட அதிக நலத்திட்டங்களை செய்ய காத்திருப்பதாக திமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2026 தேர்தலில் யார் வெற்றி அடைவார்கள் என மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.