திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என பேசப்படும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகி திமுகவுக்கு ஸ்டார் ட்ரீட்மெண்டை கொடுக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் பாஜகவோ தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை என்றால் அவர்தான் இதுகுறித்து அறிவிக்க வேண்டும்.
ஆனால் மாறாக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் அறிவிக்கின்றனர் இதிலிருந்து அதிமுக எத்தனை பலவீனம் ஆகிவிட்டது என திமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என பாஜக கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருப்பது அதிமுக ஆபத்தை விளைவிக்கும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
அதிமுக பாஜக கூட்டணியில் நிச்சயம் விரிசல் ஏற்படும் என திமுக கூறிவரும் நிலையில் திமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி என்று சொல்லும் நிலையில் அந்த கூட்டை கலைக்க பாஜக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் முருகன் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இந்த கட்சி விடுதலை சிறுத்தைகளாக இருக்குமா என பலரும் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன் தெளிவாக இருக்கும் நிலையில் பாஜக பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் ஒருபோதும் இருக்காது என தெரிவித்துள்ளார் இதனால் யார் எனl முருகனிடம் கேட்டபோது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சியானது வாஜ்பாய் காலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தது என குழு ஒன்றை கொடுத்துள்ளார்.
அவர் கூறுவதை பார்த்தால் மதிமுக என்பது தெரிய வருகிறது. மதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக விரும்பிய நிலையில் நான்கு தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் ஆறு தொகுதிகள் ஒதுக்கலாம் என திமுக கூறியது அதனை தொடர்ந்து ஆறு தொகுதிகளை பெற்றுக்கொண்டு சூரியன் சின்னத்தில் கட்சியினரை போட்டியிட வேண்டும் என வைகோ தெரிவித்தார்.
அதுபோல 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியது. அதிலும் திமுக சின்னத்திலேயே மதிமுக போட்டியிட்டது..
இதுபோன்ற செயல்களை கவனித்த பாஜக எப்படியாவது மதிமுகவை தங்கள் வலைக்குள் கொண்டுவர வேண்டுமென தூண்டில் போட்டு காத்துக் கொண்டிருக்கிறது.
மதிமுகவுக்கு வரும் தேர்தலின் போது 10 இடங்களையாவது திமுக ஒதுக்குகின்றன என பேசப்படுகின்றது. இது போன்ற செய்திகள் பரவி வருவதால் திமுகவை விட்டு மதிமுக விலகிவிடுமா என்ற அச்சம் தற்போது திமுகவினர் இடையே ஏற்பட்டுள்ளது