பான் கார்டு என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படும் நிலையில் வரி செலுத்துவோர் அனைவரும் பான் கார்டு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பான் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பான் கார்டு ஆக்டிவா இல்லை என்றால் அல்லது உங்களிடம் பான் அட்டை இருந்தால் வருமான வரித்துறை தற்போது 10,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வருகின்றனர். பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என தெரியாமல் பலரும் உள்ள நிலையில் ஒரு சிலர் தவறுதலாக இரண்டு பான் அட்டை வைத்துள்ளனர்.
அதனால் அவர்களுக்கு அரசால் எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல் வங்கி முதலீடு சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல் போன்ற முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது,
ஒருவருடைய பான் கார்டு ஆக்டிவாக இல்லாத நிலையில் அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பான் கார்ட் ஆக்டிவேக உள்ளதா என்பதை வீட்டில் இருந்தே சரி பார்க்க வருமான வரி துறையின் மின்னணு தகவல் வலைதளத்திற்கு செல்ல வேண்டும். கீழே உள்ள குயிக் லைன்ஸ் அல்லது இன்ஸ்டன்ட் இ சர்வீஸ் விரைவில் வெரிபை யுவர் பான் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் பான் கார்டில் உள்ள முழு பெயர், பிறந்த தேதி மற்றும் பான் மற்றும் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் அந்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு பான் ஆக்டிவாக உள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.