ஒவ்வொரு நபருக்கும் ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே அரசு தரக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற முடியும், மேலும் அரசு சார்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.
மலிவு விலையில் பொருட்கள் பெற முடியும். அதனால் ஒவ்வொரு நபரும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மகளிர்களுக்கு ரேஷன் அட்டையின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அரசு மக்களுக்கு அதிர்ச்சி தரும் அளவிற்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ஏபிஎல் ரேஷன் கார்டு அதாவது வறுமைக் கோட்டுக்கு மேல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது
இந்த குடும்பங்களுக்கு அதிக அளவு ரேஷன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த அளவை அரசு குறைத்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை மற்றும் 20 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். ரேஷன் ஒரு கிலோ கோதுமைக்கு இரண்டு ரூபாய் மற்றும் ஒரு கிலோ அரிசிக்கு மூன்று ரூபாய் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது.
அதனால் இந்த சட்டத்தின் கீழ் மற்றும் பிஹெச். அட்டைதாரர்கள் மட்டுமே மானிய விலையில் ரேஷன் பெறுகின்றனர். குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக வருவதில்லை அதனால் அவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் மாநில அரசின் பொறுப்பாக உள்ளது.
இந்த புதிய முறை மாநிலங்களின் நிதி செலவுகளை அதிகரித்து வருகின்றது. அண்மையில் தெலுங்கானா அரசு ரேஷன் கார்டுகளில் 17 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளது இது ஒவ்வொரு மாதமும் சுமார் 6000 டன்னுக்கு மேல் அரிசியின் சுமையை மாநிலத்தின் மீது சுமத்தியுள்ளது
ஏபில் உறுப்பினர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராததால் இந்த ரேஷன் தொகையை மாநில அரசு இந்த முடிவிலிருந்து ஏபிஎல் குடும்பங்களுக்கு ரேஷன் வழங்கும் பொறுப்பு முழுமையாக மாநில அரசின் மீது விழுந்து இருக்கின்றது.
ஏபிஎல் அட்டை வைத்திருப்பவர்கள் அரசு திட்டங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்கள். தற்போது ரேஷன் வழங்கப்படும் அளவிலும் குறைத்து இருப்பதால் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்