அந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

0
124

குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. திருநெல்வேலி, குமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரையில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

குமரி கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு டிசம்பர் மாதம் 1ம் தேதியான நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதோடு புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அதோடு நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை அன்று தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் இன்று நகரத்தின் ஒரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட இருக்கிறது. இது தொடர்பாக புவியரசன் நேற்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்றைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, இது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் அதாவது 2ம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக, தென் கிழக்கு மத்திய வங்கக் அளவு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் ஆகவே 30-ஆம் தேதி முதல் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறார் புவியரசன்.