பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!!

0
48

பெண் மலட்டுத்தன்மை சரியாக அற்புதமான இயற்கை வைத்தியம்!!

இந்தப் பதிவில் பெண்களுடைய மலட்டுத்தன்மையை தீர்ப்பதற்கான ஒரு இயற்கையான தீர்வை காண இருக்கிறோம். இந்த மலட்டுத்தன்மையில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவதாக கருமுட்டை சரியான வளர்ச்சி இல்லாமல் இருப்பது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையினால் கரு உருவாகாது.

இதில் இரண்டாவது வகை என்பது கருவுற்றிருந்தாலும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களில் கரு சிதைவு ஏற்பட்டு விடும். கர்ப்பப்பையில் இருக்கக்கூடிய மலட்டு கிருமிகளை இதற்கு காரணமாகும். இந்த மலட்டு கிருமிகளை கர்ப்பப்பையில் இருந்து எவ்வாறு வெளியேற்றுவது என்பதை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:
வேப்பிலை இலைகள்
வேப்பம்பூ

நான்கு அல்லது ஐந்து கொத்து வேப்பிலை இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண வேப்பிலை இலைகளையும் இதற்கு பயன்படுத்தலாம். ஆனால் மலைவேம்பு இந்த மலட்டு தன்மைக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். எனவே மலைவேம்பு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேப்பிலை இலை கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் இருக்கக்கூடிய மலைவேம்பு பொடியை வாங்கி வந்து பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து நமக்கு தேவைப்படுவது வேப்பம்பூ.

மலைவேம்பினுடைய வேப்பம் பூவாக இருந்தால் இன்னும் சிறந்த பலன்களை அளிக்கும். இந்த பூ கிடைக்காதவர்கள் இதயையும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த வேப்பிலை இலைகளையும் வேப்பம் பூவையும் வைத்து ஒரு கசாயம் செய்வதை பார்ப்போம்.

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இந்த தண்ணீரில் நாம் எடுத்து வைத்திருக்க கூடிய வேப்பிலை இலைகளை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் வேப்பம் பூவையும் சேர்த்துக் கொள்ளவும்.

இதை இரண்டையும் சேர்த்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின்னர் இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இதுவே நீங்கள் பொடியை பயன்படுத்தி செய்கிறீர்கள் என்றால் மலைவேம்பு பொடியில் ஒரு தேக்கரண்டி மற்றும் வேப்பம்பூவின் பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

இதை மாதவிடாய் ஆன ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து குடிக்க வேண்டும். இவ்வாறு மாதவிடாய் காலத்தில் இந்த கஷாயத்தை குடிக்கும் போது நம் கர்ப்பப்பையில் இருக்கின்ற மலட்டுத்தன்மை உருவாக்கக்கூடிய கிருமிகள் மாதவிடாயின் மூலமாக வெளியேறும்.

மாதவிடாயின் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும். இவ்வாறு இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மாதவிடாய் நாட்களில் குடிக்க வேண்டும். இவ்வாறு இதை குடித்த பிறகு மலட்டு கிருமிகள் வெளியேறிய பிறகு உருவாகக்கூடிய கரு ஆரோக்கியமாக இருக்கும். கருச்சிதைவு ஏற்படாது. எனவே மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

author avatar
CineDesk