மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
35

 

மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

 

கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு முறை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகின்றது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், ஜான் கோக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ப்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் ஒருமுறை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் வொண்டர்பா பிலிம்ஸ் நிறுவனம் நடிகர்.தனுஷ் மற்றும் இயக்குநர்.அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாக இருக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நடிகர் தனுஷ் தற்பொழுது அவருடைய 50வது படமான டி50 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகின்றார். இந்த திரூப்படத்திற்கு பிறகு இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.

 

இதற்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். இயக்குநர் மாரி செல்வார்ஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தை வொண்டர்பா பிலிப்ஸ் நிறுவனம் சார்பாத நடிகர் தனுஷ் அவர்கள் தயாரிக்கின்றார்.

 

இந்த திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. அதாவது நடிகர் தனுஷ் அவர்களின் 53 வது படமாக இது உருவாக அதிக வாய்ப்பு இருக்கின்றது.