அனிருத் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!!? இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம்!!!

0
44
#image_title

அனிருத் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்!!? இது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கம்!!!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் உடன் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு திருமணம் நடக்கப் போகின்றது என்று பரவும் செய்திகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். நடிகர்கள் விஜய், சூரியா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஷால் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கிலும் நடிகர்கள் நானி, மகேஷ் பாபு, சிரஞ்சீவி போன்ற முன்னணி தெலுங்கு நடிகர்கள் பலருடனும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணம் குறித்து அடிக்கடி செய்திகள் வதந்திகள் பரவி வருவது வழக்கம். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்னர் கேரள அரசியல் தலைவர் ஒருவருடைய மகனுடன் திருமணம் நடக்கவுள்ளது என்று தகவல்கள் பரவியது.

பின்னர் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் நெருக்கமாக பழகி வருவதாகவும் நெருக்கமான புகைப்படங்கள் வெளியாகி இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவியது. இதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்த தகவலை மறுத்து அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகுகின்றனர் என்று கூறினர்.

இதையடுத்து கேரளா தொழில் அதிபருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூடிய விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் அந்த தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மறுத்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்களுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. இந்த தகவல்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தகவல்கள் பரப்பியது. இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் “திருமணம் தொடர்பாக பரவும் தகவல்கள் முற்றிலும் முழுக்க முழுக்க தவறானது. நானும் அனிருத் அவர்களும் நல்ல நண்பர்கள் தான். நண்பர்களாகத் தான் பழகி வருகிறதாம். எனக்கு திருமணம் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.