வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? வெளியுறவுத்துறை விளக்கம்!

MEA

வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், படிக்கும் நாடுகளுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்த ஆரம்பித்ததில் இருந்து, பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை நிறுத்தின. இதனால், வெளிநாடுகளில் பணிக்காகவும், படிப்புக்காகவும் சென்று தவித்து வந்தவர்களை சிறப்பு விமான சேவை மூலம் ஒவ்வொரு நாடும் அழைத்து வந்தன. இந்தியாவும் இதே போன்று, பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்களையும், வேலை இழந்து தவித்தவர்களையும் தாயகம் அழைத்து … Read more

நாமக்கல்லில் கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் அதிர்ச்சி!

Namakkal Hostital Dog

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டு படுக்கையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 719 நபர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ளன. இதனால், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் … Read more

தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடல்!

Rahul Gandhi

பொதுமக்கள் தடுப்பூசிக்காக அவதிப்படும் போது, மத்திய அரசு டிவிட்டர் புளு டிக்குக்காக சண்டையிடுவதா? ராகுல்காந்தி சாடியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் குறைந்த அளவே தடுப்பூசி தயாரிக்கப்படுவதால், தினந்தோறும் தடுப்பூசி முகாம்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுகளிடம் தடுப்பூசி கேட்டு வருகின்றன. ஆனாலும், தடுப்பூசி குறைந்த அளவே கிடைப்பதால் பொதுமக்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. … Read more

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி!

Arvind Kejriwal

பீட்சா வீடு தேடி வரும் போது ரேஷன் பொருட்கள் வரக்கூடாதா? என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மாநிலத்தில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று டெலிவரி செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான திட்டத்தை கடந்த மார்ச் மாதம் வகுத்து திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு தடைகளை உடைத்து விடுகளில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ஆனால் 2 … Read more

வண்டலூரில் புலிகளுக்கும் கொரோனா டெஸ்ட்! சிங்கம் இறந்ததால் நடவடிக்கை!

Tiger

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புலிகளுக்கும் டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உள்ள சிங்கங்கள் சரியான உணவு உண்ணாமல் இருந்தன. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட டெஸ்டில் 11 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அன்று மாலையே தொற்று பாதித்த நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தப்பட்டன. விஜி மற்றும் சசி என்ற இரண்டு … Read more

விதிகளை ஏற்காத டிவிட்டர்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

twitter vs india

இந்தியாவின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு டிவிட்டர் நிறுவனம் இணங்க வேண்டும் என மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்த மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் புதிய ஒழுங்கு விதிகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இந்த விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. காலக்கெடு கடந்த மே 25-ம் தேதியுடன் நிறைவடைந்ததால், புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதனை ஏற்று ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்கள், … Read more

கொரோனா 2ம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு! மருத்துவர்கள் எச்சரிக்கை!

corona second wave

கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு என மருத்துவகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்  இரண்டாம் அலை பரவலில் 4 லட்சம் என்ற உச்சத்தை பாதிப்பும், 4 ஆயிரத்து 500 என்ற உச்ச்த்தில் உயிரிழப்பும் எட்டியது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் தமிழகம், டெல்லி உட்பட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக … Read more

டிரம்பின் ஃபேஸ்புக் 2 ஆண்டுக்கு முடக்கம்! அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் அட்டாக்!

trump

டிரம்பின் ஃபேஸ்புக் பேஜ் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டுள்ளது. இது தனக்கு வாக்களித்த மக்களை அசிங்கப்படுத்தி விட்டதாக டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோபைடனிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடன் பதவியேற்க தேவையான நடவடிக்கைகள்  வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேப்பிட்டலில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத டிரம்ப் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவியதால், ஜனவரி … Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்! மத்திய அரசு அனுமதி!

sputnik v

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்! மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக நாடுகளை கொரோனா எனும் பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த போது முதன்முதலில் தடுப்பூசியை தயாரித்தது ரஷ்யா தான். ஸ்புட்னிக்-வி எனப் பெயரிடப்பட்ட அந்த தடுப்பூசி 91% பயனளிக்கக் கூடியது என்று ரஷ்யா அறிவித்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்தன. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்தது. அதே நேரத்தில் மற்றொரு இந்திய நிறுவனமான சீரம், … Read more

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி!

Lioness dies of Covid-19 at Chennai zoo

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா! பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதால் அதிர்ச்சி! வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இதில், நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் அன்று மாலை உயிரிழந்தது. இது போன்று, ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள இட்டவா ஆகிய இடங்களில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அனைத்து சிங்கங்களையும் பூங்கா அதிகாரிகள் தனிமைப்படுத்தினர். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் … Read more